search icon
என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • திருப்புவனம் வைகை வடகரை பகுதியில் சுவாமி வேடமிட்டு பக்தர்கள் வலம் வந்தனர்.
    • குலசேகரபட்டினம் தசரா விழாவில் கலந்து கொண்டு நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர்.

    மானாமதுரை

    குலசேகரபட்டிணம் முத் தாரம்மன் கோவிலில் வரு கிற 24-ந்தேதி தசரா திரு விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. அங் குள்ள முத்தாரம்மனை வேண்டி கொண்டால் வேண்டியது நடக்கும் என் பது நம்பிக்கை. இதை யொட்டி, தமிழகம் மட்டு மின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக் கான பக்தர்கள் தசரா அன்று தினம் முத்தாரம் மனை தரிசிக்க செல்வது வழக்கம்.

    அந்த வகையில், சிவ கங்கை மாவட்டம் திருப்புவ னம் அருகேயுள்ள வடகரை கிராமத்தைச் சேர்ந்த பக் தர்கள் வருடந்தோறும் தசரா திருவிழாவிற்கு காளி உள்ளிட்ட பல்வேறு சுவாமி கள் வேடமிட்டு செல்வார் கள். இந்தாண்டு திருவிழா–விற்காக ஒரு மண்டலம் (48 நாட்கள்) விரதமிருந்த பக்தர்கள் இன்று மாலை குலசேகரபட்டினம் செல்ல உள்ளனர்.

    இதற்காக வேடமிட்ட பக்தர்கள் திருப்புவனம், புதூர், மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் வேடமிட்டு சென்று வழிபட்டனர். நோயாளி, அம்மன், பிச் சைக்காரன், குறத்தி உள் ளிட்ட வேடமிட்டு பக்தர் கள் தாரை தப்பட்டையுடன் ஊர்வலமாக வந்தனர்.

    இதுபற்றி பக்தாகள் கூறு கையில், குலசேகரபட்டினம் முத்தாரம்மனை வேண்டிக் கொண்டால் நினைத்த காரி யம் நிறைவேறும். நோய் தாக்குதல், விபத்தில் காயம டைந்தவர்கள் அம்மனை வேண்டி கொண்டு நலம் பெற்றால் நோயாளி வேட மிட்டு சென்று நேர்த்தி கடன் செலுத்துவார்கள். அதேபோல தொழிலில் நஷ் டம் அடைந்தவர்கள் பிச் சைக்காரன் வேடமிட்டு கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்து வார்கள். நாங்கள் இன்று வேடமிட்டு நகரை வலம் வந்துள்ளோம் என்றார்.

    ஒவ்வொரு வருடமும் 50-க்கும் மேற்பட்டவர்கள் வேடமிட்டு வலம் வருவார் கள். சிவகங்கை மாவட்டத் தில் திருப்புவனம் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர் கள் காளி மற்றும் சுவாமிகள் வேடமிட்டு ஆண்டு தோறும் குலசேகரபட்டினம் தசரா விழாவில் கலந்து கொண்டு நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர்.

    • காரைக்குடியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் இணைந்து நடத்தினர்

    காரைக்குடி

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட நெடுஞ்சாலைத்துறை மற்றும் அழகப்பா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்பு ணர்வு பேரணியை காரைக் குடியில் நடத்தினர்.நெடுஞ் சாலைத் துறை கோட்டப் பொறியாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார்.

    அழகப்பா அரசு கலைக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) துரை, உதவி கோட்டப் பொறியாளர் அரிமுந்தன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக காரைக் குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, நகர்மன்ற தலை வர் முத்துதுரை, உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத் தனர்.

    நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் பேர ணியில் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் பதாகைகளை ஏந்தி நகரில் வலம் வந்தனர். இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜய்குமார், நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் பூமிநாதன், சாலை ஆய்வாளர்கள், பணியா ளர்கள், கல்லூரி பேராசிரி யர்கள் திரளாக கலந்து கொண்டனர்.ஒருங்கிணைப்பாளர் சித்ரா தேவி நன்றி கூறினார்.

    • காளையார்கோவிலில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
    • தி.மு.க. துணை பொதுசெயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆ.ராசா எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் காளையார்கோவில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தெப்பக்குளம் கீழ்கரையில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் 7,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கிழக்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான வே. ஆரோக்கியசாமி தலைமை யில் நடைபெற்றது. கூட்டத் திற்கு ஒன்றிய செயலாளர்கள் யோக.கிருஷ்ணகுமார், ஆர்.எம். கென்னடி, பேரூராட்சி மன்ற தலைவர் பிரியதர்ஷினி கவிராஜ், பொதுக்குழு உறுப் பினர் பி.டி.ஆர்.முத்து ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கலந்துகொண்டு தி.மு.க. துணை பொது செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆ.ராசா எம்.பி. பேசியதாவது:-

    இந்த ஆண்டு தமிழினத் தலைவர் கலைஞர் நூற் றாண்டு விழாவினை கொண் டாடி வருகிறோம். தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை உலகம் முழுவ தும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். கலைஞர் ஒரு தத்துவம். சமூக நீதி எங்கு வேண்டும் என்று விரும்புகிறார்களோ அங் கெல்லாம் கலைஞர் பிறந்த நாள் சிறப்பாக கொண்டா டப்பட்டு வருகிறது.

    13 வயதில் தனது பொது வாழ்க்கையை துவக்கிய வர். 94 வயது இறுதி வரை மொழி, இனம், நாட்டிற்காக அயராது பாடுபட்டவர். பேரறிஞர் அண்ணா மறை வுக்கு பிறகு கழகத் தலைவராக ஆண்டுகள் கழக தலைவரா கவும் சட்டமன்ற உறுப்பின ராக வும், ஐந்து முறை முதல்வராகவும் இருந்துள் ளார். கலைஞர் பெரியார் தத்துவத்தை தன் உள்ளடக்கிய பிதாமகன். திராவிடம் என்பது ஒரு தத்துவம். கலை ஞர் தமிழகத்தில் இருந்து டெல்லியை ஆட்சி செய்தார்.

    ஜனநாயகத்திற்கு எப்பொ ழுதெல்லாம் ஆபத்து வந்ததோ அப்போதெல்லாம் அதை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவர். சிலர் வாக்கு வங்கிக்காக அரசியல் செய்கி றார்கள். ஆனால் தலைவர் கலைஞர் கொள்கையையும், தத்துவத்தையும் விடாமல் அரசியல் செய்தார்.

    பிரதமர் மோடி தொழில திபர் அதானியுடன் சேர்ந்து கொண்டு பல்வேறு ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டுள் ளார். இதை அமெரிக்கா விலிருந்து வெளிவரும் பத்தி ரிகை ஆதாரத்துடன் வெளி யிட்டுள் ளது. இதுகுறித்து பாராளுமன்றத்தில் கேட்டால் மோடி பதில் சொல்வதே இல்லை. மாறாக அமலாக்கத் துறை வருமானவரித்துறை, சி.பி.ஐ. போன்றவர்களை நினைத்து அடக்க பார்க்கிறார். தி.மு.க. அதற்கு அஞ்சப்போவதில்லை.

    பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தொழிலதிபர் அதானி சிறைக்குப் போவார். மோடி குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படு வார். 3 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் மணிப்பூர் கலவரத்திற்கு இதுவரை பிரதமர் மோடி சிறு வருத்தம் கூட தெரிவிக்க வில்லை. இத்தகைய பிரச்சினைகளை மறைப்பதற்காக ஜாதி, மத மோதல்கள், சிறுபான்மை யின மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும். அப்பொழுது தான் இந்தி யாவை காப்பாற்ற முடியும். மூன்று மாதங்களாக இந்த பொதுக்கூட்டத்தை நடத்து வதற்காக மிகவும் சிறப்பான முறையில் மாநாடுபோல் ஏற்பாடு செய்து நடத்திய ஒன்றிய செயலாளர் ஆரோக் கியசாமி மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகளுக்கு பாராட்டு களை தெரிவித்துக் கொள்கி றேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பொதுக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சரு மான கே.ஆர்.பெரிய கருப் பன், முன்னாள் அமைச் சர் மு.தென்னவன், தமிழரசி எம்.எல்.ஏ., ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இதில் 7000 பயனா ளிகளுக்கு நலத்திட்ட உதவி களை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், ஆ.ராசா எம்.பி., முன்னாள் அமைச்சர் மு.தென்னவன், தமிழரசி எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.

    பாக முகவர்களுக்கு கைபேசி, நலிந்த கழக முன்னோடிகளுக்கு பொற் கிழி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை-எளிய மாணவி களுக்கு கல்வி நிதி உதவி, ஆதரவற்ற தொண்டு நிறுவ னங்களுக்கு அரிசி மூட்டை கள் ஆகியவை வழங்கப்பட் டது.

    இந்த பொதுக்கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் அ.கணேசன், மாவட்ட துணை செயலா ளர்கள் த.சேங்கை மாறன், கே.எஸ்.எம்.மணிமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், ஒன்றிய செயலா ளர்கள் எம்.ஜெயராமன், திருமலை முத்துராமலிங் கம், நாகனி ரவி, பூபால சிங்கம், நா.நெடுஞ்செழியன், குன்னக் குடி சுப்பிரமணியன், நகரச் செயலாளர்கள் பெரி. பாலா, க.பொன்னுச்சாமி பொதுக் குழு உறுப்பினர்கள் கரு.அசோகன்,

    பள்ளத்தூர் கே.எஸ்.ரவி, செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துதுரை மாவட்ட மகளி ரணி அமைப்பாளர் பவானி கணேசன், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஹேமலதா செந்தில், மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் திலகவதி கண்ணன், மாவட்ட மாணவ ரணி அமைப்பாளர் கதி.ராஜ்குமார் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் சி.முத்து, வனிதா கண்ணதாசன், ஜான் சந்தி யாகு சி.குழந்தைசாமி, எம்.முருகேசன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அருட் செல்வி அரசு, எஸ்தர் மேரி ஸ்டீபன்,

    இளைஞரணி ஆர். சௌந்தரராஜன், பி தினேஷ் ராஜா, பேரூர் கழகச் செய லாளர் ஜெயராமன், எ.சந்திரபோஸ் மற்றும் ஏராள மானவர்கள் கலந்து கொண் டனர். பொதுக்கூட்டத்திற் கான ஏற்பாடுகளை காளை யார் கோவில் கிழக்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான வே.ஆரோக்கியசாமி தலை மையில் ஒன்றிய கழக நிர்வாகி கள் செய்திருந்தனர்.

    • காரைக்குடியில் நடந்த அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழாவுக்கு செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
    • நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி

    அ.தி.மு.க.வின் 52-ம் தொடக்க விழாவை முன் னிட்டு காரைக்குடியில் அ.தி.மு.க.வினர் சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணி வித்து, மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றுக் கொண் டனர்.

    இதில் காரைக்குடி நகர செயலாளர் மெய்யப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. கற்ப கம் இளங்கோ, தேவ கோட்டை நகர்மன்ற தலை வர் சுந்தரலிங்கம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை தலைவர் வெங்களூர் வீரப் பன், அம்மா பேரவை ஊர வயல் ராமு, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளர் சத்குரு தேவன், கோவிலூர் சுப்பிர மணியன், மாவட்ட மகளி ரணி துணை தலைவி சோபியா பிளாரன்ஸ்,

    நகர இளைஞரணி செய லாளர் இயல் தாகூர், மகளிரணி நகர செயலாளர் சுலோச்சனா, நகர தலைவி ஆனந்தி, நகர்மன்ற உறுப்பி னர்கள் பிரகாஷ், குருபாலு, அமுதா சண்முகம், ராதா, கனகவள்ளி, வட்ட கழக செயலாளர்கள் இலைக் கடை சரவணன், மகேஷ், பக்கீர் முகம்மது உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    • சூரக்குடி ஊராட்சியில் புதிய கட்டிடங்களை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து ைவத்தார்.
    • கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    0சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை, தி.சூரக்குடி ஊராட்சிகளில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையம், கலையரங்கம், நியாய விலை கடைகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிகளில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டி டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் கூறிய தாவது:-

    பொதுமக்களின் கோரிக்கைகளுக்கிணங்க சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தி.சூரக்குடி ஊராட்சிக்குட்பட்ட பூவான்டிபட்டி கிராமத்தில் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கலை யரங்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2021-22ன் கீழ் ஆவுடைபொய்கை கிராமத்தில் ரூ.10.93 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக் கப்பட்டுள்ள அங்கன்வாடி மையம்,

    சூரக்குடி கிரா மத்தில் ரூ.14.08 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக் கப்பட்டுள்ள நியாய விலை கடை, நெற்புகப்பட்டி கிராமத்தில் ரூ.14.59 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நியாய விலை கடை, சூரக்குடி கிராமத்தில் ரூ.06.81 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள சுகாதார வளாக கட்டிடம் என மொத்தம் ரூ.53.91 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் பொதுமக்களின் பயன் பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஊராட்சி சார்பில் கொடுக்கப்பட் டுள்ள கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவ ராமன், திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம்) முத்து மாரியப்பன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராதா பாலசுப்பிரமணியன். சூரக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் முருகப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன், கானாடு காத்தான் பேரூராட்சி தலைவர் ராதிகா, காரைக் குடி வட்டாட்சியர் தங்க மணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, ஊர்காவலன், சாக்கோட்டை தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் ஆனந்த், கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னதுரை, பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பத்தூர், எஸ் புதூர் ஒன்றியங்களில் புதிய மின் மாற்றிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • 37 பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் எஸ் புதியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வைரவன்பட்டி, குளத்துப்பட்டி கிராமங்களிலும் திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னாம்பட்டி கிராமத்திலும் சுமார் 27 லட்சம் 26 லட்சம் மதிப் பீட்டில் புதிய மூன்று மின்மாற்றிகளை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார். இதனால் 650 மின் பயனீட்டாளர்கள் பயன்பெறு வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் 68 அரசு பள்ளிகள் உள்பட 105 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 470 மாணவர்கள் மற்றும் 6323 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் குன்றக்குடி தருமை கயிலை குருமணி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 100 மாணவர்

    களுக்கும் பிரான்மலை ஊராட்சி வள்ளல் பாரி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 70 மாணவர்களுக்கும் கிருங்கா கோட்டை ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 37 பேருக்கும் விலையில்லா சைக்கிள் களை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சிகளில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால் துரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து, திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சி யர் செல்லமுத்து, சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி, மின் செயற் பொறியாளர் செல்லத்துரை, உதவி செயற்பொறியாளர் ஜான் எப் கென்னடி, உதவி மின் பொறியாளர்கள் சையது ஹாசாலி, சுரேஷ், எஸ்.புதூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், திருப்பத்தூர் ஒன்றிய சேர்மன் சண்முக வடிவேல், வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ராஜ்குமார், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் சீமான் சுப்பு, திருப்பத்தூர் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் கண்ணன், நெற்குப்பை பேரூராட்சி சேர்மன் கே.பி.எஸ்.பழனியப்பன்.

    சிங்கம்புணரி பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து, அவை தலைவர் கணேசன், ஒன்றிய செயலாளர் பூமிநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் அஞ்சப்பர் ஜெயராமன், பொதுக்குழு உறுப்பினர் சோமசுந்தரம், நகர கழகச் செயலாளர் கதிர்வேல், துணை ஒன்றிய செயலாளர் சிவபுரி சேகர், முத்துக்குமார், பிரான்மலை ஊராட்சி மன்ற தலைவர் ராமசுப்பிரமணியன், கிருங்கா கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் அகிலா கண்ணன், துணைத் தலைவர் அமுதாசண்முகநாதன், ஊராட்சி மன்றசெயலர் ஆண்டவர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராசியப்பன், ஊர் அம்பலக்காரர் ஜோதி, ஆர். பாலகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் பொன்னம்மாள் பெரிய பொன்னன், ஆதிமுத்து, குமார் சுப்பிரமணியன், குளத்துப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அழகம்மாள் பெருமாள், சேதுராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • 25 ஆண்டுகளுக்கு பிறகு தார்சாலை அமைக்கப்பட்டது.
    • கிராம மக்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ளது சேர்வை காரன் பட்டி. இங்கு சுமார் 100 குடும்பங்கள் வசித்து வரு கின்றனர். 25 ஆண்டுகளாக சிங்கம்புணரி எஸ்.புதூர் செல்லும் மாநில நெடுஞ் சாலையில் இருந்து இந்த கிராமத்திற்கு வர சாலை மோசமாக இருந்தது.

    இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.இதுகுறித்து சிவகங்கை மாவட்ட சேர்மன் பொன்மணி பாஸ்கரனிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். இதையடுத்து அந்த பகுதியை ஆய்வு செய்த அவர் பொதுநிதியில் ரூ.18.03 லட்சம் நிதி ஒதுக்கி சாலை அமைக்க ஏற்பாடு செய்தார்.

    சாலை பணிகள் முடிவடைந்த நிலையில் பொன் மணி பாஸ்கரன் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதை ெதாடர்ந்து பொதுமக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச் சியை வெளிப்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் சிங்கம்பு ணரி வடக்கு ஒன்றிய செயலாளர் திருவாசகம், நகர செயலாளர் வாசு, சேர்வைக்காரன் பட்டி ஊராட்சி தலைவர் பூங் கோதை கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை அருகே நடந்த விபத்தில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு செந்தில்நாதன் எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.
    • உயர் தர சிகிச்சை அளிக்க மருத்துவர்களிடம் கேட்டு கொண்டார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரி பேருந்தும், படமாத்தூரில் இருந்து கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்த சரக்கு வாகனமும் கட்டுப் பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளா னது. இதில் பேருந்தில் பயணம் செய்த 27 மாணவ, மாணவிகள், 9 பேராசிரி யர்கள் காயம் ஏற்பட்டு சிவ கங்கை அரசு மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதுபற்றிய தகவல் அறிந்த சிவகங்கை சட்ட மன்ற உறுப்பினர் செந்தில் நாதன் உடனே சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் உயர் தர சிகிச்சை அளிக்க மருத்து வர்களிடம் கேட்டு கொண் டார்.

    அவருடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாக ராஜன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங் கோவன், ஒன்றிய செயலா ளர்கள் செல்வ மணி, கோபி, பழனிச்சாமி, ஜெக தீஸ்வரன், நகர் துணை செயலாளர் மோகன், பாசறை மாவட்ட பொருளா ளர் சரவணன், மாவட்ட கவுன்சிலர் கோமதி தேவ ராஜ், அமைப்புசாரா அணி மாவட்ட இணை செயலாளர் அழகர்பாண்டி, மாவட்ட மாணவரணி அன்பு மற்றும் நகர ஒன்றிய மாவட்ட நிர் வாகிகள் சென்றனர்.

    • சேது பாஸ்கரா விவசாயக் கல்லூரி சார்பில் பாரம்பரிய நடவு திருவிழா நடந்தது.
    • 50 விவசாயிகளுக்கு காரட் தொண்டு நிறுவனத்தின் மூலமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சேதுபாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் கழணி மரபுவழி உழ வர் கூட்டமைப்பு இணைந்து நடத்திய பாரம்பரிய நெல் நடவு திருவிழா, இயற்கை விவசாயப் பயிற்சி மற்றும் மரக்கன்று வழங்கும் விழா என முப்பெரும் விழா எஸ்.ஆர்.பட்டிணம் கிராமத்தில் நடைப்பெற்றது.

    விழாவில் ஊராட்சி தலை வர் அஜிதா நமச்சிவா யம் வரவேற்றார். சேதுபாஸ் கரா கல்விக் குழுமத் தலை வர் முனைவர் சேதுகுமணன் தலைமை தாங்கி, பாரம்பரிய நெல் நடவு திருவிழாவை தொடங்கி வைத்தார்.

    மேலும் கிராமப்புற மக்களுக்கு இயற்கை விவசாய பயிற்சிகள் மற்றும் உதவிகள் தம் கல்லூரியின் மூலமாக தொடர்ந்து வழங் கப்படும் என்றும், பால் மதிப்புக்கூட்டுதல், சந்தைப் படுத்துதல் மற்றும் பால் கூட்டுறவு சங்கம் பதி விற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.

    கல்லல் வட்டார வேளாண்மை இணை இயக் குநர் அழரோஜா, இயற்கை வேளாண்மையில் அரசு திட்டங்கள் குறித்து விளக்கி னார். சேதுபாஸ்கரா கல் லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் கருப்புராஜ் இயற்கை வேளாண்மை இடுப்பொருட்கள் தயாரிப்பு குறித்து பயிற்சி அளித்தார்.

    குன்றக்குடி வேளாண் அறிவியல் மைய மருத்துவர் ரோமகிருஷ்ணன், கால்நடை களின் முக்கியத்து வம் மற்றும் அரசுத்திட்டங்கள் குறித்து விளக்கினார். மேலும் உழவியல் பேராசி ரியர் முனைவர் விமலேந்தி ரன் கலந்துக் கொண்டு விவசாயிகளுக்கு, வேளாண் அறிவியல் மையத்தின் செயல்பாடுகள், மண்வளம், நீர் பரிசோதனை குறிந்து விளக்கினார். இவ்விழாவில் 50 விவசாயிகளுக்கு காரட் தொண்டு நிறுவனத்தின் மூலமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நிறைவாக மாணவர் அர்ஜூன் நன்றி கூறினார்.

    • இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் என் மண் என் தேசம் நிகழ்ச்சி நடந்தது.
    • கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பீர் முஹம்மது வரவேற்றார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை, சிவகங்கை மாவட்ட நேரு யுவகேந்திரா அமைப்பு மற்றும் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து என் மண், என் தேசம் என்னும் தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது.

    கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பீர் முஹம்மது வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ் கான் தலைமை தாங்கினார்.

    நிகழ்வில் சிவகங்கை, நேரு யுவகேந்த்ரா அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக சிவகங்கை, குழந்தைகள் நல வாரிய உறுப்பினர், மீனாட்சி சுந்தரம் கலந்து கொண்டு பேசினார்.

    இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் சேக் அப்துல்லா மற்றும் பாத்திமா கனி ஆகியோருடன் இணைந்து நேரு யுவகேந்திரா அமைப்பை சேர்ந்த நாகப்பாண்டி மற்றும் கார்த்திகா ஆகியோர் செய்திருந்தனர்.

    • மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தலைமையாசிரியர்களுக்கு அதிகாரத்தை கலெக்டர் வழங்கினார்.
    • புதுமையான உத்தரவாக இருப்பதாக பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    சிவகங்கை

    தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இன்று பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விடிய, விடிய அடை மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிக்கு செல் லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

    இந்த நிலையில் சிவ கங்கை மாவட்டத்திலும் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. இதையடுத்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மழையின் தாக்கத்திற்கு ஏற்றாற்போல் பள்ளிகளை இயக்குவது தொடர்பாக அந்தந்த பகுதி தலைமை ஆசிரியர்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும், சூழ்நி லைக்கு தகுந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாமா? அல்லது பள்ளிகளை நடத்தலாமா? என்று தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துகொள்ளலாம் என்று தெரி–வித்துள்ளார்.

    இது சிவகங்கை மாவட்டத்தில் புதுமையான உத்தரவாக இருப்பதாக பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • 3 நாட்கள் நடந்த மஞ்சுவிரட்டில் 99 காளைகள் பங்கேற்றன.
    • மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை போட்டிபோட்டு அடங்கினர்.

    சிவகங்கை

    சிவகங்கை காமராஜர் காலனியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டும் கே.டி.ஆர். கல்யாணி அம்மாள் நினைவு தினத்தை முன்னிட்டு உலக சாதனை முயற்சிக்காகவும் வடமாடு மஞ்சுவிரட்டு பேரவை மற்றும் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை இனைந்து நடத்தும் 3 நாள் தொடர் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

    வீரத்தமிழர் வடமாடு பேரவை மாநிலத் தலைவர் ராஜசேகரன், மாநில கவுரவ தலைவர் கே.டி.ஆர். தங்க ராஜ், மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்து, துணைத் தலைவர் அதிகரை வேங்கை, திருப்புவனம் தமிழ்ச் சங்க வழக்கறிஞர், துணை பொதுச்செயலாளர் செல்வம், பொருளாளர் மயில்வாகனம், மாநில கவுரவ ஆலோசகர் கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டியில் சிவ கங்கை, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 99 காளைகள் பங்கேற்றன. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை போட்டிபோட்டு அடங்கினார்.

    இதில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு ப்ரிட்ஜ், கிரைண்டர், மிக்ஸி, பீரோ, கட்டில், சேர் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. 3 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை ஆயிரக்க ணக்கான பொது மக்கள் மற்றும் மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

    ×