search icon
என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • திருப்பத்தூர் ஊராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் நடந்தது.
    • கவுன்சிலர்களின் அனைத்து கோரிக்கைகளுக்கும் விரைந்து நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் என்று சேர்மன் பதிலளித்தார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. யூனியன் சேர்மன் சண்முக வடிவேல் தலைமை வகித்தார். ஆணையாளர் அருள் பிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர் பரணபாஸ் அந்தோணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் ரமேஷ் பிரசாத் வரவேற்றார். உதவியாளர் மாணிக்கராஜ் செலவு கணக்கு அறிக்கை வாசித்தார்.

    கூட்டத்தில், ஒன்றிய குழு துணைத் தலைவர் மீனா வெள்ளைச்சாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பையா, கலைமாமணி, ராமசாமி, பழனியப்பன், சுமதி, ஜெயபாரதி, கலைமகள், சகாதேவன் ஆகியோர் பங்கேற்றனர்.

    இதில், கவுன்சிலர் ராமசாமி பேசுகையில், பேரூராட்சி மன்ற உறுப்பி னர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர சம்பள தொகை போன்று ஒன்றிய கவுன்சிலர்களுக்கும் வழங்க இந்த மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    தொடர்ந்து கவுன்சிலர் கருப்பையா பேசுகையில் ஆ.தெக்கூரில் இருந்து திருக்களம்பூர் செல்லும சாலை பல ஆண்டுகளாக சீரமைப்பு செய்யப் படாமல் இருந்து வருகிறது.

    இதனால் அவ்வழியே நாள்தோறும் பயணிக்கும் வாகன ஓட்டிகளும் பள்ளி மாணவ, மாணவிகளும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

    இந்நிலை யில் இரு மாவட்ட எல்லையில் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்ட எல்லைப் பகுதியில் தற்சமயம் புதிய தார் சாலை போடப்பட்டு விட்டது. எனவே சிவகங்கை மாவட்ட எல்லை பகுதியில் உடனடியாக புதிய சாலை ஏற்படுத்தி தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    கவுன்சிலர் கலைமகள் ரா மசாமி கூறுகையில், செண்பகபேட்டை பகுதி யில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் மாணவர் களுக்கென்று போதிய கழிவறை வசதி இல்லாமல் திறந்த வெளியிலும் காட்டுப்பகுதிக்கும் செல்ல வேண்டிய ஒரு அசாதார சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே மாணவர்கள் நலனை கருத்தில்கொண்டு உடனடியாக புதிய கழிவறை கட்டிடத்தை கட்டித் தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    தொடர்ந்து கவுன்சிலர் சகாதேவன் பேசுகையில் மேலையான் பட்டியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்படாமல் பள்ளி மாணவ மாணவிகள் மரத்தடியில் பயிலும் சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே இடிக்கப்பட்ட பழைய கட்டிட இடத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டிட விரைந்து நடவ டிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    கவுன்சிலர் களின் அனைத்து கோரி க்கை களுக்கும் விரைந்து நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் என்று சேர்மன் பதிலளித்தார்.

    • மகளிர் உரிமைத் தொகை திட்ட தகவல்களை தெரிந்து கொள்ள உதவி மையங்கள் செயல்படுகின்றன.
    • கலெக்டர் தெரிவித்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியி ருப்பதாவது:

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பான தகவல்கள் மற்றும் விளக்கங்களை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக, அலுவலகங்களில் உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    அதில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 78451 45001 என்ற எண்ணிலும், சிவ கங்கை வருவாய் கோட் டாட்சியர் அலுவலகத்தில் 78457 38002 என்ற எண்ணி லும், தேவ கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் 7845014004 என்ற எண்ணிலும், சிவ கங்கை வட்டாட்சியர் அலுவலகத்தில் 8438856008 என்ற எண்ணிலும், மானா மதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் 8925786003 என்ற எண்ணிலும், காளை யார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் 84389 57006 என்ற எண்ணிலும், திருப்பு வனம் வட்டாட்சியர் அலுவ லகத்தில் 8925664001 என்ற எண்ணிலும், இளையான் குடி வட்டாட்சியர் அலுவல கத்தில் 9042317001 என்ற எண்ணிலும், திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 8925078921 என்ற எண்ணிலும், காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 8807378005 என்ற எண்ணிலும், தேவகோட்டை வட்டாட்சி யர் அலுவலகத்தில் 88703 62101 என்ற எண்ணிலும், சிங்கம்புணரி வட்டாட்சியர் அலுவலகத்தில் 8122576001 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    மேலும் பொது மக்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் குறித்த தகவல்கள் தொடர்பாகவும், உதவி மையங்களை தொடர்பு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மூதாட்டியின் வீட்டை உடைத்து 7 பவுன் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
    • தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ் பெக்டர் மைக்கேல் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பெரியகாரை ஊராட்சி சேண்டல்பெரியான் கிரா மத்தைச் சேர்ந்தவர் கண் ணப்பன் மனைவி கண்ணாத் தாள் (வயது 70). இவர் தேவகோட்டை தினசரி காய்கறி மார்க்கெட்டில் சாலை யோரத்தில் வியாபா ரம் செய்து வருகிறார்.

    தினமும் தனது கிரா மத்தில் உள்ள வீட்டில் இருந்து அதிகாலையில் தேவகோட்டை தினசரி மார்க்கெட்டில் காய்கறி விற்பனை செய்துவிட்டு மதியம் வீடு திரும்புவதை வழக்கமாகக் கொண்டுள் ளார். நேற்று வழக்கம்போல் காய்கறி விற்பனை செய்ய அதிகாலையில் சென்று விட்டு மதியம் சுமார் 2 மணி அளவில் வீட்டில் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப் போது உள்ளே இருந்த இரண்டு பீரோக்களும் உடைத்து பொருட்கள் சிதறிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் பீரோவில் இருந்த 7 பவுன் தங்கச் செயின்கள் ரொக்க பணம் ரூ.10,000 ஆகியவை கொள்ளை போயிருந்தது.

    இதுபற்றி தகவல் அறிந்த தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ் பெக்டர் மைக்கேல் ஆகி யோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரட்டை கொலை செய்து வீட்டை உடைத்து தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவத்தால் தேவகோட்டை மக்கள் அச்சத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில் மூதாட்டி வீட்டில் நகை கொள்ளை சம்பவம் மேலும் அச்சத்தை அதிகரித்துள்ளது.

    • சிவகங்கையில் அனைத்து கட்சி சார்பில் கடையடைப்பு-ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சிவகங்கை

    சிவகங்கையில் அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டம் நகர்மன்றத் தலைவர் துரை ஆனந்த் தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு அரசியல் கட்சியினர், வர்த்தக சங்க பிரதிநிதிகள், பொதுநல அமைப்பினர், கவுன்சி லர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை மாவட்டத்தில் ரெயில்வே கோரிக்கைகள் தொடர்பாக 30 ஆண்டு களாக மனு கொடுத்தும் ரெயில்வே நிர்வாகம் அதனை நிறைவேற்ற செவி சாய்க்காமல் உள்ளது. மாவட்டத்தின் தலைநகராக உள்ள சிவகங்கையை கடந்து செல்லும் 11 ரெயில் களில் ஒரு சிலவற்றை தவிர மற்ற ரெயில்கள் நிலையத் தில் நிறுத்தப்படுவதில்லை. இதனால் வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர்.

    சிவகங்கை ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்குடி வரை மட்டும் இயக்கப்பட்டு வரும் பல்லவன் ரெயிலை சிவகங்கை, மானாமதுரை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தியும் ரெயில்வே நிர்வாகம் கண்டு கொள்ள வில்லை.

    இதை கண்டித்தும், ரெயில்வே தொடர்பான கோரிக்கை களை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், சிவகங்கை நகரில் வருகிற 23-ந்தே தி சனி க்கி ழமை அனை த்துக் கட்சி சார்பில் கடை யடைப்பு போராட்டம், ரெயில் மறியல் நடத்துவது என ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்ப ட்டது. இதற்கு வர்த்தக சங்கத்தினர், வியா பாரிகள், பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது.

    • பணத்தை பறித்து சென்ற கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • குற்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள காஞ்சிபட்டியை சேர்ந்தவர் அற்புத அருண். இவர் நேற்று இரவு வீட்டில் இருந்து ரூ.9 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கத்தை ஒரு பெட்டியில் வைத்து மோட்டார் சைக்கிளில் சிவகங்கைக்கு புறப்பட்டார். வீட்டில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் 3 மோட்டார் சைக்கிள்களில் மர்ம நபர்கள் அற்புத அருணை பின்தொடர்ந்தனர்.

    சிவகங்கை அருகே கண்டனிப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அற்புற அருணை சுற்றிவளைத்தனர். முகமூடி அணிந்திருந்த அவர்கள் கையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்தனர்.

    அற்புத அருணை சரமாரியாக தாக்கிய அந்த கும்பல் அவர் வைத்திருந்த பெட்டியை கத்திமுனையில் பறித்தனர். பெட்டியை திறந்த அந்த கும்பல் அதில் பணம் இருப்பதை உறுதி செய்தபின் ரூ.9 லட்சத்து 30 ஆயிரத்துடன் அற்புத அருணின் மோட்டார் சைக்கிளையும் பறித்துக் கொண்டு தப்பினர்.

    இதுகுறித்து அற்புத அருண் காளையார் கோவில் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். மேலும் பணத்தை பறித்து சென்ற கும்பல் குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    சம்பவம் நடந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளையும் ஆய்வு செய்து அந்த கும்பலை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் அற்புத அருணுக்கு ரூ.9 லட்சத்து 30 ஆயிரம் எப்படி கிடைத்தது எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கையில் நடந்த இந்த சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சிவகங்கையில் கடந்த சில மாதங்களாக கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தனியாக செல்லும் முதியவர்கள், பெண்களை குறி வைத்து சமூக விரோதிகள் நகை, பணம் பறிப்பில் ஈடுபடுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதுதொடர்பாக நகர் பகுதி போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஆனால் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    தற்போது பூட்டியிருக்கும் வீடுகளிலும் கொள்ளை கும்பல் கைவரிசை காட்டுவது அதிகரித்து வருகிறது. கஞ்சா, சட்டவிரோத மது விற்பனை, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, மோதல், கொலை, கொள்ளை, வழிப்பறி அதிகரித்துள்ளது. இதனை போலீஸ் உயர் அதிகாரிகள் நேரடியாக விசாரணை நடத்தி குற்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சிவகங்கையில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளி, கல்லூரி விடுதிகளில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
    • மாணவர்கள் நல்லமுறையில் படிப்பதுடன், கூடுதலான தனித்திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில், மானாமதுரை ஆகிய பகுதிகளில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் விடுதிகளில் கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது விடுதியில் வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர், கழிவறை வசதி, சமையற்கூடம், மாணவிகளின் வருகை பதிவேடு போன்றவைகளை அமைச்சர் ஆய்வு செய்தார். மேலும் மாணவ-மாணவி களிடம் குறைகளை கேட்ட றிந்து கலந்துரையாடினார்.

    அப்போது அமைச்சர் கயல்விழி கூறியதாவது:-

    முதலமைச்சர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனை கருத்தில் கொண்டு, மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலத்திலேயே திட்டமிட்டு எதிர்கால லட்சியங்கள், தங்களது படிப்பின் நோக்கங்கள் ஆகியன குறித்து முழுமையாக அறிந்து செயல்பட வேண்டும். தங்களது குடும்ப சூழ்நிலையை அறிந்து, பெற்றோர்களை மனதில் கொண்டு நல்லமுறையில் படிப்பதுடன், கூடுதலான தனித்திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் , மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சிவக்குமார், மானாமதுரை நகர் மன்றத்தலைவர் மாரியப்பன் கென்னடி, மானாமதுரை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் லதா அண்ணாதுரை மற்றும் காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து மற்றும் விடுதி காப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என கலெக்டர் ஆஷா அஜீத் வலியுறுத்தினார்.
    • அரசின் அறிவுரையின்படி பொது மக்கள் கடைபிடித்திடல் வேண்டும்.

    சிவகங்கை

    முதலமைச்சரின் சீரிய நல்லாட்சியில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் போது, விநாயகர் சிலை களை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வழிகாட்டு தல்களின் படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.

    அதில், கீழ்கண்ட நடைமுறைகளை அரசின் அறிவுரையின்படி பொது மக்கள் கடைபிடித்திடல் வேண்டும்.

    களிமண்ணால் செய்யப் பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப்பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவை யற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட் களால் மட்டுமே செய்யப் பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப் படுகிறது.

    சிலைகளின் ஆபர ணங்கள் தயாரிப்ப தற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப் படலாம்.

    ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட் களை பயன்படுத்த கண்டிப் பாக அனுமதிக்கப்படாது. நீர் நிலைகள் மாசு படுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள்/பந்தல்கள்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

    சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத இரசாயன சாயம்/எண்ணை வண்ணப் பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சு களை பயன்படுத்தக்கூடாது, மாற்றாக சுற்றுச்சூழலுகுகந்த நீர் சார்ந்த, மக்கக் கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

    சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும்.

    மேலும், விநாயகர் சிலைகளை சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள சிவகங்கை தெப்பக்குளம், மானாமதுரை, ஆலங்ககுளம், இளை யான்குடி சாலை கிராமம் டேங்க், சிவன்கோவில் ஊரணி, சிலம்பனி ஊரணி, சிங்கம்புணரி ஊரணி இடங்களில் மட்டும் தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.

    விநாயக சதுர்த்தி விழாவினை சூற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டா டும்படி பொதுமக்கள் கொண்டாடிட வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகி யோர்களை அணுகலாம்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

    • மகளிர் நல இலவச மருத்துவ முகாம் நடந்தது.
    • 20க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டு பெண்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கினர்.

    தேவகோட்டை

    தேவகோட்டை ரோட்டரி சங்கம், மதுரை குரு மருத்துவமனை இணைந்து மகளிர் நல இலவச மருத்துவ ஆலோசனை முகாமை நடத்தியது. முகாமினை முன்னாள் துணை ஆளுநர் கணேசன் தொடங்கி வைத்தார். ரோட்டரி சங்கத் தலைவர் ஊடிவயல் கதிரேசன் வரவேற்றார். குரு மருத்துவ மனை குழந்தையின்மை மற்றும் மகளிர் நல சிறப்பு மருத்துவர் டாக்டர் கல்பனா தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டு பெண்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கினர்.

    குழந்தை இல்லாதவர்கள், நீர்க்கட்டி, கர்ப்பப்பவை கட்டி, சினைப்பையில் கட்டி உள்ளவர்கள் கருமுட்டை குறைபாடு விந்தணு குறைபாடு கர்ப்பப்பை புற்றுநோய் அதிக ரத்தப்போக்கு மார்பக புற்று நோய் மற்றும் பல்வேறு குறைபாடுகள் உள்ளவர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ரோட்டரி சங்க செயலாளர் திருவேங்கடம், பொருளாளர் ராமநாதன், கம்யூனிட்டி சர்வீஸ் சேர்மன் சந்திரசேகரன், நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • பிற மாநிலங்களுக்கு முன்மாதிரி முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம் கொள்கிறார்.
    • குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட செட்டிநாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ரூ.58 கோடி மதிப்பில் பல்வேறு கட்டமைப்புகளுக்கான கட்டுமான பணிகளுக்கான பூமிபூஜை நடந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலை வகித்தார். கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    விழாவில் அவர் பேசியதாவது:-

    முதலமைச்சர் தலைமை யிலான தமிழக அரசின் அனைத்து துறைகளும் சிறந்து விளங்கி, தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த 2021-ல் தேர்தலின் போது பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதியினை நிறைவேற்றிடும் பொருட்டு, 85 சதவீதம் வாக்குறுதிகள் தற்போது வரை நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், சொன்ன வாக்குறுதிகள் மட்டுமின்றி சொல்லாத பல்வேறு புதிய திட்டங்களையும் தமி ழகத்தில் சிறப்பாக செயல்ப டுத்தி வருகி றார்கள்.

    மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு புதுமைப்பெண் திட்டம் ஆகிய திட்டங்கள் மட்டுமன்றி, வருகின்ற செப்டம்பர் 15-ம் தேதி அன்று கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

    மேலும், தேர்தல் வாக்குறுதியிணை நிறைவேற்றிடும் பொருட்டு, சிவகங்கை மாவட்டத்தில் சட்டக் கல்லூரி, வேளாண் கல்லூரி ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பின் அடிப்படையில் அதனையும் நிறைவேற்றியுள்ளார்கள்.

    இதுபோன்று பொதுமக்களுக்கும், மாணாக்கர்களுக்கும் பயனுள்ள வகையில் தொலைநோக்கு பார்வையுடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்படுவது மட்டுமின்றி, அதற்கான அனைத்து அடிப்படை கட்டமைப்புகளையும் மேம்படுத்தி, பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியான முதலமைச்சராக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திகழ்ந்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் இந்நிகழ்ச்சியில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, கானாடுகாத்தான் பேரூராட்சி தலைவர் ராதிகா, வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மை அலு வலர் பாபு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் இசைக்கப்பட்ட தவில் உலக தலைவர்கள் மட்டுமின்றி மாநாட்டில் பங்கேற்ற அனைவரையும் மெய்மறக்க செய்தது.
    • சபாக்களில் மட்டுமே ஒலித்த இசை சர்வதேச மாநாட்டில் ஒலித்துள்ளது.

    சிவகங்கை:

    சர்வதேச நாடுகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்த ஜி 20 மாநாடு டெல்லியில் இரண்டு நாட்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ரஷ்யா, கனடா உள்ளிட்ட உலக நாடுகளில் தலைவர்கள் பங்கேற்றதன் மூலம் இந்தியாவின் பெருமை உலகறிய செய்துள்ளது.

    முன்னதாக குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உலக தலைவர்களை மகிழ்விக்கும் வண்ணம் அளித்த விருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொண்டார். இதையொட்டி விருந்தில் பங்கேற்றவர்களின் நாவின் சுவைக்கு ஏற்ப பாரம்பரிய உணவு வகைகள் பரிமாறப்பட்டன. அதேபோல் செவிக்கு விருந்தளிக்கும் வகையில் இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டன.

    பல்வேறு நாடுகள், பல்வேறு மாநிலங்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலான இசை நிகழ்ச்சிகள் ஜி 20 மாநாட்டை கலகலக்க செய்தது. உலக தலைவர்கள் கலந்துகொண்ட மாநாட்டில் நாட்டின் பாதுகாப்பு, நலன், எதிர்காலம் மட்டுமின்றி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இதில் மேற்கத்திய இசைகள் எப்போதும் முதலிடம் பிடித்து வந்த நிலையில், அந்தந்த நாட்டின், மாநில இசைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

    இதில் தமிழகத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் இசைக்கப்பட்ட தவில் உலக தலைவர்கள் மட்டுமின்றி மாநாட்டில் பங்கேற்ற அனைவரையும் மெய்மறக்க செய்தது. இதனை இசைக்க சிவகங்கையை சேர்ந்த மணி கண்டன் டெல்லிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

    தமிழகத்தின் இசை பாரம்பரியத்தை உலகறிய செய்யும் வகையில் சிவகங்கை அரசு இசைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் பிள்ளைவயல் காளியம்மன் நகரை சேர்ந்த தவில் வித்வான் மணிகண்டன் (வயது 46) மற்றும் நாதஸ்வர கலைஞரான திருவாரூரை சேர்ந்த அரசு இசைப்பள்ளி நாதஸ்வர ஆசிரியர் இளையராஜா ஆகியோரை மத்திய அரசு சார்பில் அதிகாரிகள் டெல்லி அழைத்து சென்றனர்.

    இவர் மும்பை உட்பட பல்வேறு நகரங்களில் நடைபெறும் கான சபா, மார்கழி உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தவில் இசைத்து வருகிறார். மேலும் புதுடெல்லியில் உள்ள சங்கீத நாடக சபாவிலும் உறுப்பினராக உள்ளார்.

    இதனை அறிந்தே அவர் ஜி 20 மாநாட்டிற்கு அழைக்கப்பட்டு இருந்தார். தமிழகத்தின் அடையாளமான தவிலை மணிகண்டனும், மற்றொரு கலைஞர் நாதஸ்வரத்தையும் இசைத்து தமிழகத்தின் இசை பாரம்பரியத்தை உலக தலைவர்களின் செவிகளுக்கு விருந்தாக்கினர்.

    இதுபற்றி மணிகண்டன் 'மாலை மலர்' நிருபரிடம் கூறுகையில், உலக தலைவர்கள் பங்கேற்று இந்தியா தலைமையேற்று நடத்திய ஜி 20 மாநாட்டில் ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரிய இசையை ஒலிக்க செய்யும் வகையில் 75 இசை கலைஞர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். இதில் அவர்கள் அந்தந்த மாநில இசை கருவிகளுடன் வந்திருந்தனர்.

    மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை விருந்து நிகழ்ச்சியில் இசைக்கப்பட்ட ஒலியானது உலக தலைவர்களுக்கு பெரிதும் வியப்பை ஏற்படுத்தியது. அதிலும் நம்முடைய நாதஸ்வரம், தவில் இசையை அவர்கள் அனைவரும் மெய்மறந்து கேட்டு ரசித்தனர். நம்முடைய நாதஸ்வரம், தவில் இசை சுமார் அரை மணி நேரம் இசைக்கப்பட் டது.

    அந்த நேரத்தில் நாங்கள் காவடி சிந்து, பஜனை பாடல்கள், தமிழக கலாசார பாடல்கள், மாலை மாற்றுதல் உள்ளிட்டவைகளை இசையாக வடித்தோம். இது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. சபாக்களில் மட்டுமே ஒலித்த இசை சர்வதேச மாநாட்டில் ஒலித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • கற்பகவிநாயகர் கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடைபெறும்.
    • விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடைபெறும். இந்த விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    காலை 10 மணிக்கு கொடி கோவிலை சுற்றி வந்தது. 11 மணிக்கு கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது. முன்னதாக கொடிமரம் அருகே வெள்ளி மூஷிக வாகனத்தில் உற்சவர் கற்பகவிநாயகரும், வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேசுவரரும் எழுந்தருளினர். கொடிமரத்திற்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    முதல் நாள் திருவிழாவான நேற்று கற்பகவிநாயகர் மூஷிக வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தார். 2-ம் நாள் திருவிழாவான இன்று(திங்கட்கிழமை) இரவு சிம்ம வாகனத்திலும், 12-ந்தேதி பூத வாகனத்திலும், 13-ந்தேதி கமல வாகனத்திலும், 14-ந்தேதி இரவு ரிஷப வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.வருகிற 15-ந்தேதி மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. 16-ந்தேதி மயில் வாகனத்திலும், 17-ந்தேதி குதிரை வாகனத்திலும் கற்பகவிநாயகர் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதேபோல் 18-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. முன்னதாக அன்றைய தினம் மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். ஆண்டிற்கு ஒரு நாள் மட்டுமே இவ்வாறு மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 19-ந்தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. அன்றைய தினம் பகலில் மூலவருக்கு மோதகம் படையல் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடும் நடக்கிறது. இத்துடன் சதுர்த்தி விழா நிறைவு பெறுகிறது.

    விழாவில் கலை நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி தண்ணீர்மலை செட்டியார், காரைக்குடி சாமிநாதன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு 2 பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
    • இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தளக்காவூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்னர் 100 நாள் வேலை வாய்ப்பு பணி வழங்காததை கண்டித்தும், ஓராண்டாக ஊதியம் வழங் கவில்லை எனக் கூறி இரு பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதம் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தளக்காவூரைச் சேர்ந்த நாச்சன்மை என்பவர், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி தனது உறவினர்கள் பெயர்களை விதிமுறைக்கு மீறி சேர்த் துள்ளதை உயர் அதிகாரி களுக்கு தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து, அவரை ஊராட்சி மன்றத் தலைவி தமிழ்ச்செல்வி 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியில் இருந்து விடுபட்ட தாக கூறப்படு கிறது. இதே போல் கடந்தாண்டு 100 நாள் வேலை வாய்ப்பு திட் டத்தில் பணித்தள பொறுப் பாளராக பணியாற்றிய லட்சுமி என்பவருக்கு ஓராண்டாக ஊதியம் வழங் காததை கண்டித்தும், இரு பெண்களும் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தகவல் அறிந்து வந்த நாச்சியாபுரம் காவல்துறை யினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ×