என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
18 வயது சிறுவனுடன் கள்ளக்காதல்- தொடர்ந்து உறவுக்கு வற்புறுத்தியதால் பெண் கல்லால் தாக்கி கொலை
- செல்வியின் வீடு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்துள்ளது.
- அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து வீட்டை திறந்து பார்த்தபோது செல்வி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் பன்றிமலை அருகே உள்ள மலையாண்டிபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவர் சோலைக்காடு பகுதியில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பராமரித்து வருகிறார். இவரது மனைவி செல்வி (வயது 46). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது சிறுவன் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். தச்சுவேலை பார்க்கும் அந்த சிறுவன் கணேசனை மாமா என்று உரிமையோடு அழைத்ததால் அவர் மீது சந்தேகம் ஏற்படவில்லை.
ஆனால் அந்த சிறுவனுடன் செல்விக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. கடந்த 4 வருடங்களாக இவர்கள் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். கணேசன் இரவு நேரங்களில் தோட்டத்தில் வன விலங்குகள் வருதை தடுக்க பாதுகாப்புக்கு சென்று விடுவார்.
அந்த சமயங்களில் செல்விக்கு துணையாக சிறுவன் இருந்துள்ளான். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கும் இவர்கள் தொடர்பில் எந்த சந்தேகமும் ஏற்படவில்லை.
நேற்று செல்வியின் வீடு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து வீட்டை திறந்து பார்த்தபோது செல்வி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து கன்னிவாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வெள்ளையன், சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ், எஸ்.எஸ்.ஐ. ஈஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பன்றிமலையில் பதுங்கி இருந்த சிறுவனை பிடித்து விசாரணை நடத்தியதில் தான் கொலை செய்ததை ஒத்துக்கொண்டார். தொடர்ந்து செக்ஸ் உறவுக்கு தன்னை கட்டாயப்படுத்தி வந்ததாகவும் இதனால் தான் செல்வியை தள்ளி விட்டதாகவும் தெரிவித்தார்.
அப்போது அங்கிருந்த கல்லின் மீது அவரது தலை பட்டு மயங்கி விழுந்ததாகவும், அதன் பிறகு குழவிக் கல்லால் தாக்கி கொலை செய்ததாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சிறுவனை கைது செய்தனர். பேரன், பேத்தி எடுத்த நிலையில் சிறுவனுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்