என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
பொன்னேரி 'டாஸ்மாக்' கடையில் ஓசியில் மதுபாட்டில் கேட்டு விற்பனையாளர் மீது தாக்குதல்- 3 பேர் கைது
- பொன்னேரி அடுத்த தீபன் சத்திரம் தச்சூர் சாலையில் அரசு டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது.
- 3 வாலிபர்களும் பீர்பாட்டிலை உடைத்து விற்பனையாளர் மூர்த்தியை தாக்கினர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த தீபன் சத்திரம் தச்சூர் சாலையில் அரசு டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு விற்பனையாளராக மூர்த்தி (40) என்பவர் உள்ளார்.
இந்தநிலையில் மதுக்கடைக்கு வந்த 3 வாலிபர்கள் ஓசியில் மதுபாட்டில் கேட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதனை விற்பனையாளர் மூர்த்தி கண்டித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த 3 வாலிபர்களும் பீர்பாட்டிலை உடைத்து விற்பனையாளர் மூர்த்தியை தாக்கினர். இதில் அவரது கழுத்து மற்றும் முகத்தில் பலத்த பாட்டில் குத்து விழுந்தது. இதுகுறித்து மூர்த்தி பொன்னேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து விசாரித்தனர். இதில் ஓசியில் மதுபாட்டில் கேட்டு ரகளையில் ஈடுபட்டு தாக்கியது பொன்னேரி பழைய பஸ் நிலையம் வள்ளலார் தெருவை சேர்ந்த குணா, சூர்யா, லட்சுமிபதி என்பது தெரிந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்