என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
வானகரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் செல்போன் பறித்த 3 சிறுவர்கள் கைது
- மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் திடீரென மல்லிகாவின் விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.
- செல்போன் பறிப்பில் ஈடுபட்டு தப்பியது போரூர் பகுதியை சேர்ந்த 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என்பது தெரிந்தது.
போரூர்:
சென்னை, வானகரம், பள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெயசந்திரன். ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவரது மனைவி மல்லிகா. இவர் வீட்டின் முன்பு நின்று கொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் திடீரென மல்லிகாவின் விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து மதுரவாயல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினர்.
இதில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு தப்பியது போரூர் பகுதியை சேர்ந்த 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என்பது தெரிந்தது. தலைமறைவாக இருந்த 3 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் இதுபோல் வேறு எந்தெந்த இடங்களில் செல்போன் பறிப்பு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு உள்ளனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்