search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வானகரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் செல்போன் பறித்த 3 சிறுவர்கள் கைது
    X

    வானகரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் செல்போன் பறித்த 3 சிறுவர்கள் கைது

    • மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் திடீரென மல்லிகாவின் விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.
    • செல்போன் பறிப்பில் ஈடுபட்டு தப்பியது போரூர் பகுதியை சேர்ந்த 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என்பது தெரிந்தது.

    போரூர்:

    சென்னை, வானகரம், பள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெயசந்திரன். ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவரது மனைவி மல்லிகா. இவர் வீட்டின் முன்பு நின்று கொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் திடீரென மல்லிகாவின் விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து மதுரவாயல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினர்.

    இதில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு தப்பியது போரூர் பகுதியை சேர்ந்த 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என்பது தெரிந்தது. தலைமறைவாக இருந்த 3 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் இதுபோல் வேறு எந்தெந்த இடங்களில் செல்போன் பறிப்பு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு உள்ளனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×