search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    700 லாரிகளை ஒரே இடத்தில் நிறுத்தி கல்குவாரி உரிமையாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்
    X

    700 லாரிகளை ஒரே இடத்தில் நிறுத்தி கல்குவாரி உரிமையாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

    • 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்.
    • அரசின் கவனத்தை ஈர்க்க, கல்குவாரிகளுக்கு சொந்தமான 700க்கும் மேற்பட்ட லாரிகளை ஒரே இடத்தில் நிறுத்தி வைத்துள்ளோம்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட கல்குவாரி மற்றும் கிரஷர்கள் இயங்கி வருகிறது. இந்தநிலையில் கல்குவாரி தொழிலுக்கு உரிய முறையில் அனுமதி வழங்க வேண்டும், லைசென்ஸ் வழிமுறைகளை எளிதாக்க வேண்டும் ,சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் ஏற்படும் அச்சுறுத்தல்களை தடுக்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 26-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் கல்குவாரிகள், கிரஷர்கள், டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் கடந்த 4 நாட்களாக பல்லடம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்குவாரிகள், கிரஷர்கள், டிப்பர் லாரிகள் இயங்கவில்லை. இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் ஒரே இடத்தில் 700க்கு மேற்பட்ட லாரிகளை நிறுத்தி வைத்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் கல்குவாரி உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட குவாரி உரிமை யாளர்கள் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது: -

    15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். சட்டத்திற்கு உட்பட்டு முறையான அனுமதி பெற்றுக்கொண்டு கல்குவாரிகள் நடத்தி வருகிறோம். சட்டவிரோதமாக கல்குவாரிகள் இயங்க வில்லை. கல்குவாரி தொழில் தொடர்ந்து நடத்த முடியாமல் கடுமையான சூழல் இருந்து வருகிறது. கடந்த 4 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

    அரசின் கவனத்தை ஈர்க்க, கல்குவாரிகளுக்கு சொந்தமான 700க்கும் மேற்பட்ட லாரிகளை ஒரே இடத்தில் நிறுத்தி வைத்துள்ளோம். போராட்டத்தால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நேரடியாக சுமார் 20 ஆயிரம் தொழிலாளர்களும், மறைமுகமாக சுமார் 2 லட்சம் தொழிலாளர்களும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசு எங்களது கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×