search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பொதுச்செயலாளரான பின் சொந்த ஊர் பயணம்: எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு
    X

    பொதுச்செயலாளரான பின் சொந்த ஊர் பயணம்: எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு

    • அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
    • கிண்டி கத்திப்பாரா சந்திப்பிலும் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஏற்பட்ட கருத்து மோதலை தொடர்ந்து கடந்த 9 மாதங்களாக நீடித்து வந்த சட்ட போராட்டங்களை கடந்து எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராகி உள்ளார்.

    இந்த நிலையில் இன்று காலை எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து சேலத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டு சென்றார்.

    சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்து பின்னர் வழியனுப்பி வைத்தனர்.

    அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

    கிண்டி கத்திப்பாரா சந்திப்பிலும் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர்.

    கத்திப்பாரா மேம்பாலத்தில் நின்றபடியே எடப்பாடி பழனிசாமியின் கார் மீது பூக்களை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    கிண்டி கத்திப்பாராவில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்தார். அப்போது சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் தலைமையில் முன்னாள் அமைச்சர் வளர்மதி முன்னிலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் பெரும்பாக்கம் ராஜசேகர், ஏசுபாதம், குமார், ஜானகிராமன், பழனிவேல், பரணிபிரசாத், தேன்ராஜா, கவுன்சிலர் சதீஷ்குமார், பேரவை மாநில துணை செயலாளர் வேளச்சேரி எம்.ஏ.மூர்த்தி, எடப்பாடி பழனிசாமிக்கு கத்திப்பாரா சந்திப்பில் வைத்து வீரவாள் வழங்கினார். இவரது தலைமையில் பாலத்தில் இருந்து பூக்கள் தூவப்பட்டன. பகுதி செயலாளர் ஷேக் அலி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் திரண்டு எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி விண்ணதிர கோஷங்களை எழுப்பினார்கள்.

    இதே போன்று, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட எல்லை பகுதிகளிலும் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் திரண்டு வாழ்த்து கோஷங்களை எழுப்பினார்கள்.

    தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளிடம் சால்வை, மலர் மாலைகள் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து தாம்பரம், மாமண்டூர், மதுராந்தகம், விழுப்புரம் ஆகிய இடங்களிலும் திரளான அ.தி.மு.க. வினர், நிர்வாகிகள் திரண்டு எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு கொடுத்தனர்.

    பூரண கும்ப மரியாதையுடன், பூங்கொத்து கொடுத்தும் அனைத்து இடங்களிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சேலம் மாவட்டம் தலைவாசலுக்கு செல்லும் எடப்பாடி பழனிசாமிக்கு அங்கு புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பாக மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் நல்லதம்பி, ஜெயசங்கரன், சித்ரா, ராஜமுத்து, மணி ஆகியோர் முன்னிலையில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் எடப்பாடி பழனிசாமி காரில் சேலம் செல்கிறார். சேலம் திருவாகவுண்டனூர் ரவுண்டானாவில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    Next Story
    ×