search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூரில் வாடகைக்கு வீடு எடுத்து உல்லாசம்- கள்ளக்காதலி பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை
    X

    வேலூரில் வாடகைக்கு வீடு எடுத்து உல்லாசம்- கள்ளக்காதலி பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை

    • ஆத்திரமடைந்த ரமேஷ் பெட்ரோலை எடுத்து திலகவதி மீது ஊற்றி தீ வைத்தார். அவர் உடல் முழுவதும் வேகமாக தீ பரவி பற்றி எரிந்தது.
    • திலகவதி ரமேசை வெளியே விடாமல் தீவைக்க முயன்றார். கதவை ஓடிச்சென்று பூட்டி ரமேசை கட்டிப்பிடித்தார்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்தவர் திலகவதி (வயது 35) இவருக்கு திருமணம் ஆகி 2 மகள்கள் உள்ளனர். வேலூர் முள்ளிபாளையம் ராமமூர்த்தி தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கும் குடியாத்தம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (42) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ரமேஷ் துணி வியாபாரம் செய்து வந்தார்.

    கள்ளக்காதலியை அடிக்கடி சந்திப்பதற்காக ரமேஷ் முள்ளிபாளையம் பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து குடியேறினார்.

    இருவரும் அந்த வீட்டில் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். நேற்றுமுன்தினம் கணவர் இல்லாத நேரத்தில் திலகவதி ரமேஷ் வீட்டுக்கு சென்றார். இருவரும் அங்கு தனிமையில் இருந்தனர்.

    நேற்று காலையில் இருவருக்கும் திடீரென கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ் பெட்ரோலை எடுத்து திலகவதி மீது ஊற்றி தீ வைத்தார்.

    அவருடைய உடலில் தீப்பற்றியது மேலும் ரமேஷ் மீதும் தீப்பற்றி எரிந்தது.

    இருவரும் அலறி சத்தம் போட்டனர். அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று கதவை உடைத்து தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் திலகவதியின் உடலில் 90 சதவீதத்திற்கு மேல் தீ பற்றி உடல் கருகியது.

    ரமேஷ் அங்கிருந்து தப்பி ஓடி வெளியே வந்தார். ஆட்டோ மூலம் அவர் ஆஸ்பத்திரிக்கு செல்ல முயற்சி செய்தார். வழியில் உடல் எரிச்சல் அதிகமானதால் கோட்டை அகழியில் குதித்தார். அவரை பொதுமக்கள் மீட்டனர்.

    வேலூர் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் இருவரையும் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த திலகவதி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். ரமேஷ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திலகவதிக்கும் ரமேசுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. திலகவதியை தனிமையில் சந்திப்பதற்காக ரமேஷ் தனியாக வீடு வாடகைக்கு எடுத்தார்.

    அங்கு இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தனர். நேற்று முன்தினம் திலகவதி ரமேஷ் அறைக்கு வந்தார். இருவரும் தனிமையில் இருந்தனர். நேற்று காலையில் திலகவதி அவரது மகள்களுக்கு வயது அதிகமாகி வருகிறது.

    எனவே கள்ளத்தொடர்பை விட்டுவிடலாம் என கூறியுள்ளார். உன்னால் தான் நான் திருமணம் செய்யாமல் இருக்கிறேன் என ரமேஷ் கூறியுள்ளார். அதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    ஆத்திரமடைந்த ரமேஷ் பெட்ரோலை எடுத்து திலகவதி மீது ஊற்றி தீ வைத்தார். அவர் உடல் முழுவதும் வேகமாக பரவி பற்றி எரிந்தது.

    அப்போது அவர் ரமேசை வெளியே விடாமல் தீவைக்க முயன்றார். கதவை ஓடிச்சென்று பூட்டி ரமேசை கட்டிப்பிடித்தார்.

    இதில் அவரது உடலில் தீ பற்றியது. இருவரும் கூச்சலிட்டனர். பொதுமக்கள் ஓடி வந்து கதவை உடைத்தனர். ரமேஷ் உயிர் பிழைப்பதற்காக வெளியே ஓடி சென்றார்.

    வழியில் உடல் எரிச்சல் அதிகமாக இருந்ததால் கோட்டை அகழியில் குதித்துள்ளார்.

    இந்த சம்பவத்தில் வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×