என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
ஆவடி அருகே வேன் மோதி தொழிலாளி பலி- அதிர்ச்சியில் தந்தையும் பலி
- மகன் இறந்து சோகத்தில் இருந்த குப்பனுக்கு இன்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
- மகன், தந்தை என அடுத்தடுத்து இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருநின்றவூர்:
ஆவடி அருகே உள்ள பாலவேடு கிராமத்தை சேர்ந்தவர் குப்பன்(வயது72). இவரது மகன் அசோக் குமார்(49). தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.
இவர் திருநின்றவூர் அடுத்த பாக்கம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த மினி வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அசோக்குமாரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அசோக் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுபற்றி வீட்டில் இருந்த அவரது தந்தை குப்பனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர் மிகவும் மனவேதனை அடைந்தார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி சென்றனர்.
இதற்கிடையே மகன் இறந்து சோகத்தில் இருந்த குப்பனுக்கு இன்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குப்பன் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மகன், தந்தை என அடுத்தடுத்து இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்