search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி
    X

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி

    • முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
    • வரும் 14-ந்தேதி காலை 7 மணிக்கு செங்கல்பட்டு, திருப்போரூர் கூட்ரோடு போலீஸ் பூத் அருகில் தொடங்கி திருக்கழுகுன்றம் வரை சைக்கிள் போட்டி நடைபெற உள்ளது.

    காஞ்சிபுரம்:

    முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டில் 14-ந்தேதியன்று சைக்கிள் போட்டி நடைபெறவுள்ளது. இதில் மாணவ-மாணவிகள் பங்கேற்குமாறு இரு மாவட்ட ஆட்சியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் போட்டி குறித்து மாவட்ட கலெக்டர் ஆ.ர. ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. வரும் 14-ந்தேதி காலை 7 மணிக்கு செங்கல்பட்டு, திருப்போரூர் கூட்ரோடு போலீஸ் பூத் அருகில் தொடங்கி திருக்கழுகுன்றம் வரை இந்தப் போட்டி நடைபெற உள்ளது.

    இதில் 13 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ, மாணவியர்களுக்கு 10 கி.மீ. தூரமும், 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. மாணவியர்களுக்கு 15 கி.மீ. தூரமும், 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. மாணவியர்களுக்கு 15 கி.மீ. தூரமும் போட்டி நடத்தப்பட உள்ளது.

    இப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ - மாணவியர்கள் பள்ளித் தலைமை ஆசிரியரிடமிருந்து சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் கொண்டு வர வேண்டும். வருகிற 13-ந்தேதி மாலை 4 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். முதல் 3 இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 வீதமும், 4 முதல் 10 இடம் வரை வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.250-ம் பரிசுத் தொகையாக வழங்கப்படும். 14-ந்தேதி போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு போட்டி நடத்தப்படும் இடத்துக்கு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 74017 03481 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரத்தில் நடக்கவுள்ள சைக்கிள் போட்டி குறித்து மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சியில் சைக்கிள் போட்டி வருகிற 15-ந்தேதி நடக்க உள்ளது. அன்றைய தினம் காலை 7 மணிக்கு காஞ்சிபுரம், பழைய ரெயில் நிலையம் அருகில் உள்ள சி.எஸ்.ஐ. கல்லறை அருகில் தொடங்கி வையாவூர் சாலை வழியாக கரூர் வரை நடைபெறும்.

    இதில் பங்கேற்கவுள்ள மாணவ-மாணவிகள் பள்ளித் தலைமை ஆசிரியரிடமிருந்து சான்றிதழ் பெற்று வர வேண்டும். வருகிற 14-ந் தேதி மாலை 4 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 7401703481 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×