search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ஜனதா மட்டும் தான் அமலாக்க துறையை ஏவுகிறதா...?- திருமாவளவன்
    X

    பா.ஜனதா மட்டும் தான் அமலாக்க துறையை ஏவுகிறதா...?- திருமாவளவன்

    • அனைவரும் அறிந்த உண்மை தான்.
    • இந்தியா கூட்டணியில் இது வரை பிரதமர் வேட்பாளர் யார் என்று விவாதிக்கவில்லை.

    அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனை என்பது பா.ஜனதா அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று விமர்சிக்கப்படுகிறதே என்ற கேள்விக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மறுத்தார்.

    இது பற்றி அவர் கூறியதாவது:-

    மத்தியில் யார் ஆட்சி செய்தாலும் ஐ.டி., அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்ற அரசின் விசாரணை அமைப்புகள் எதிர்க்கட்சிகள் மீது ஏவப்படுகின்றன. இது அனைவரும் அறிந்த உண்மை தான். அதிலும் பா.ஜ.க. மிகத் தீவிரமாக எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த இந்த அமைப்புகளை பயன்படுத்துகிறது. இந்தியா கூட்டணியில் இது வரை பிரதமர் வேட்பாளர் யார் என்று விவாதிக்கவில்லை. விவாதிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இந்தியா கூட்டணி வெற்றி பெறட்டும். அதன் பிறகு அதை முடிவு செய்வோம் என்றார்.

    Next Story
    ×