search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கயத்தாறு அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து கணவன்-மனைவி, மகள் படுகாயம்
    X
    பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான காரை படத்தில் காணலாம்.

    கயத்தாறு அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து கணவன்-மனைவி, மகள் படுகாயம்

    • கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி பகுதியில் வந்த போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
    • சாலையோரம் உள்ள பள்ளத்தில் பாய்ந்ததில் காரின் முன்பக்கம் உடைந்து என்ஜின் மற்றும் உதிரி பாகங்கள் தனியாக கழன்று சென்று விபத்துக்குள்ளானது.

    கயத்தாறு:

    சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் திருவேங்கடன். இவரது மகன் பிரகாஷ் (வயது39). இவரது மனைவி சாந்தினி. இவர்களுக்கு சாரா (3) என்ற மகள் உள்ளார்.

    இந்நிலையில் பிரகாஷ் நேற்று இரவு தனது காரில் மனைவி மற்றும் மகளுடன் நெல்லை புறப்பட்டார். அவர்கள் இன்று அதிகாலை கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி பகுதியில் வந்த போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

    பின்னர் சாலையோரம் உள்ள பள்ளத்தில் பாய்ந்ததில் காரின் முன்பக்கம் உடைந்து என்ஜின் மற்றும் உதிரி பாகங்கள் தனியாக கழன்று சென்று விபத்துக்குள்ளானது.

    இதில் பிரகாஷ் உள்பட 3 பேரும் காயமடைந்தனர். தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு கயத்தாறு சப்-இன்ஸ்பெக்டர் காசிலிங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×