என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
சேப்பாக்கத்தில் கிரிக்கெட் பார்த்த ரசிகரின் மோட்டார் சைக்கிள் திருட்டு- 2 வாலிபர்கள் கைது
BySuresh K Jangir1 May 2023 9:40 AM GMT
- மோட்டார் சைக்கிளை சந்தேகப்படும்படியான 2 பேர் தள்ளிச் சென்ற போது அங்கு சாதாரண உடையில் இருந்த போலீஸ்காரர் சக்திவேல், அவர்களை பிடித்து விசாரித்தார்.
- அண்ணா சதுக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி இருவரையும் கைது செய்து மோட்டார் சைக்கிளை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.
சென்னை சூளைமேடு பாரி தெரு அவ்வை நகரைச் சேர்ந்தவர் பாலசுந்தரம் (38). சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்தார். சேப்பாக்கம் ரெயில் நிலையம் அருகில் மோட்டார் சைக்கிள் நிறுத்தி விட்டு கிரிக்கெட் போட்டியை பார்க்க சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிளை சந்தேகப்படும்படியான 2 பேர் தள்ளிச் சென்ற போது அங்கு சாதாரண உடையில் இருந்த போலீஸ்காரர் சக்திவேல், அவர்களை பிடித்து விசாரித்தார். இருவரும் மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அண்ணாசதுக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி இருவரையும் கைது செய்து மோட்டார் சைக்கிளை கைப்பற்றி விசாரணை நடத்தினார். கைது செய்யப்பட்ட சுரேஷ்ராஜன் (55) திருநெல்வேலியையும், மணி (40) தூத்துக்குடியையும் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X