என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
குடிபோதையில் மகனை வெட்டி கொன்ற தந்தை
- குடிபோதையில் பெற்ற மகனையே தந்தை வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள குச்சனூர் 4-வது வார்டு வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் ரெங்கன் (வயது56). இவருக்கு மீனா என்ற மனைவியும், மகன்களும் உள்ளனர்.
ரெங்கன் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
ரெங்கன் குடி பழக்கத்திற்கு அடிமையானவர். இவரும் அவரது மூத்த மகன் மணிகண்டன் (31) என்பவரும் ஒன்றாக சேர்ந்து மது குடிப்பது வழக்கம்.
போதையில் இவர்கள் தங்கள் குடும்ப பிரச்சினை தொடர்பாக பேசிக்கொள்வதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவும் 2 பேரும் ஒன்றாக மது குடித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு அருகில் இருந்தவர்கள் அவர்களை விலக்கி விட்டனர்.
அதன்பின் வீட்டிற்கு தூங்க சென்ற தனது மகனை ரெங்கன் துரத்தி சென்று அரிவாளால் வெட்டினார். இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
போதையில் கொலை செய்ததை அறிந்ததும் ரெங்கன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து மீனா சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ரெங்கனை தேடி வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட மணிகண்டன் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
குடிபோதையில் பெற்ற மகனையே தந்தை வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்