search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் நாளை கிறிஸ்துமஸ் விழாவில் நலத்திட்ட உதவிகள் என்.ஆர்.தனபாலன் வழங்குகிறார்
    X

    சென்னையில் நாளை கிறிஸ்துமஸ் விழாவில் நலத்திட்ட உதவிகள் என்.ஆர்.தனபாலன் வழங்குகிறார்

    • பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
    • வர்த்தக அணித் தலைவர் எம்.வி.எம்.ரமேஷ்குமார், கலை இலக்கிய அணிச் செயலாளர் பிரேம்சந்த் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி வழங்குகிறார்கள்.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தென்சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் நாளை (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு பள்ளிக்கரணையில் கிறிஸ்துமஸ் விழா மாவட்டத் தலைவர் மடிப்பாக்கம் எஸ்.சாமுவேல் ரவி தலைமையில் நடைபெறுகிறது.

    பாஸ்டர் டி.கோபால்ராஜ் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி வழங்குகிறார். பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். வர்த்தக அணித் தலைவர் எம்.வி.எம்.ரமேஷ்குமார், கலை இலக்கிய அணிச் செயலாளர் பிரேம்சந்த் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி வழங்குகிறார்கள்.

    இதில் நிர்வாகிகள் ஆர்.சிவகுமார், ஜி.சந்தானம், டி.உதயகுமார், வி.எஸ்.கே.செந்தில்குமார், சி.பி.செல்வன், ஏ.அமல்ராஜ், ஜெ.கிருபாகரன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    Next Story
    ×