search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அ.தி.மு.க. அரசின் சாதனைகளை தி. மு.க. உரிமை கொண்டாடுவதா?- மாநகராட்சி மன்ற குழு செயலாளர் கே. கார்த்திக் கண்டனம்
    X

    அ.தி.மு.க. அரசின் சாதனைகளை தி. மு.க. உரிமை கொண்டாடுவதா?- மாநகராட்சி மன்ற குழு செயலாளர் கே. கார்த்திக் கண்டனம்

    • மண்டல கூட்டத்தில் தி.மு.க.வினர் கடந்த அ. தி.மு.க. ஆட்சியில் எதுவுமே செய்யவில்லை என கூறுகின்றனர்.
    • அ. தி.மு.க. அரசு செய்த சாதனைகளை தாங்களே செய்ததாக தி.மு.க. வினர் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் மண்டல குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க. மாநகராட்சி மன்ற குழு செயலாளர் டாக்டர் கே. கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    மண்டல கூட்டத்தில் தி.மு.க.வினர் கடந்த அ. தி.மு.க. ஆட்சியில் எதுவுமே செய்யவில்லை என கூறுகின்றனர்.

    திருவொற்றியூரில் 65 அடி சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. மிகப் பிரமாண்டமான நூலகம் கட்டப்பட்டது. தாசில்தார் அலுவலகம் கட்டப்பட்டது. அரசு கலைக் கல்லூரி உருவானது. விடுபட்ட இடங்களில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றியது. மெட்ரோ ரயில் திட்டம் வந்தது என பல திட்டங்கள் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.

    மாட்டு மந்தை மேம்பாலம் அ.தி.மு.க. ஆட்சியில் அப்போது சட்டமன்ற உறுப்பினரான குப்பன் அவர்களின் சீரிய முயற்சியால் மாண்புமிகு அம்மாவால் அறிவிக்கப்பட்டு அப்போதைய நெடுஞ்சாலை துறை அமைச்சர் எங்களது இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்பட்டது.

    பாலம் பணிகள் முடிந்த பின் முதல்வராக எங்களது இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் திறந்து வைக்கப்பட்டது.

    இந்த பாலத்தை தாங்களே கட்டியதாக தி.மு.க.வினர் கூறுகின்றனர். திருவொற்றியூர் கிராம தெரு ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் செய்வதற்காக கடந்த ஏப்ரல் மாதம் கேட் நிரந்தரமாக மூடப்பட்டது. நடைபாதை வாசிகள் கூட செல்ல முடியாத அளவிற்கு அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டன.

    ஆனால் இன்று வரை அங்கு எந்த பணிகளும் தொடங்கவில்லை. இம்மாதம் 30 - ம் தேதிக்குள் பணி தொடங்காவிட்டால் எங்களது கட்சி சார்பில் போராட்டம் நடத்துவோம். ஏழாவது வார்டில் கடந்த 10 மாதங்களாக தெருவிளக்கு கம்பங்கள் மழைநீர் கால்வாய்க்காக அகற்றப்பட்டது. அதை மீண்டும் பொருத்துவதாக கூறிக் கொண்டே இருக்கிறார்கள் ஆனால் இன்று வரை பொருத்தவில்லை .

    மணலி செல்லும் சாலையில் பக்கிங்காம் கால்வாய் மேல் கட்டப்பட்டு வரும் பாலம் இன்னும் சிறிய அளவிலே பணி உள்ளது அதை விரைந்து முடிக்க வேண்டும். அந்த பணி தடைபட என்ன காரணம் என்பதை விளக்க வேண்டும். சிபிசிஎல் தொழிற்சாலை பைப்புகள் இருப்பதாக கூறப்பட்டது . அந்த தொழிற்சாலையும் தனது பங்களிப்பு பணத்தை தமிழக அரசுக்கு செலுத்தியுள்ளது அதற்கு நானும் முயற்சி செய்தேன்

    விரைவில் மேம்பாலம் திறக்கப்பட வேண்டும். நாய் குவாட்டர்ஸ் அருகில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்படுபவர்களுக்கு மாநகராட்சி இறப்பு சான்றிதழ் வழங்க மறுக்கிறது.

    இது கண்டிக்கத்தக்கது. அதில் உள்ள நடைமுறையை சரி செய்து இறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும். அ. தி.மு.க. அரசு செய்த சாதனைகளை தாங்களே செய்ததாக தி.மு.க. வினர் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். இது நியாயம் தானா என பொதுமக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

    Next Story
    ×