என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
தருமபுரி அருகே சொத்து தகராறில் தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணன் கைது
- குணசேகரன் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஆறுமுகத்தின் தலை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டினார்.
- குணசேகரின் மகன் மகேஸ்வரன் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் கொட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன். விவசாயியான இவருக்கு ஈஸ்வரி என்ற மகளும், 5 மகன்களும் உள்ளனர்.
இந்த நிலையில் தனது சொத்தில் இருந்து 5 மகன்களுக்கும் தலா 5 ஏக்கர் நிலமும், ஈஸ்வரிக்கு 3 ஏக்கர் நிலமும் என பிரிந்து கொடுத்து விட்டார். அதில் அவர்கள் தனித்தனியாக விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஈஸ்வரிக்கு கொடுக்கப்பட்ட நிலத்தில் சிறுபகுதியில் அவரது தம்பி ஆறுமுகம் விவசாயம் செய்து கொள்வதற்காக கொடுத்துவிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து மற்றொரு தம்பியான குணசேகரன் (வயது52), தனது அக்கா ஈஸ்வரியிடம் எப்படி ஆறுமுகத்திற்கு நிலத்தில் பங்கு கொடுத்தாய் என்று கூறி தகராறில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் நேற்று மதியம் ஆறுமுகமும், அவரது மனைவி பூங்குழலியும் தோட்டத்தில் விவசாயம் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த குணசேகரன், அவரது மனைவி காளியம்மாள்(45), மகன் மகேஷ்வரன் (20) ஆகியோர் ஆறுமுகத்திடம் தகராறில் ஈடுபட்டனர்.
இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து ஆறுமுகத்தை தாக்கியுள்ளனர். அப்போது குணசேகரன் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஆறுமுகத்தின் தலை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டினார்.
இந்த தகராறில் காளியம்மாளுக்கு காயம் ஏற்பட்டது. உடனே ஆறுமுகத்தை வலியால் துடித்தார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆறுமுகத்தை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து அவர் தருமபுரி டவுன் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயசங்கர் வழக்கு பதிவு செய்து குணசேகரனை கைது செய்தனர். அவரது மனைவி காளியம்மாளும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை பிறகு அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குணசேகரின் மகன் மகேஸ்வரன் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்