என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
மேட்டுப்பாளையம் மளிகை கடையில் ஓசி சிகரெட் கேட்டு தகராறு: தி.மு.க. கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது
- மளிகைக்கடை காரர் மற்றும் அவரது மனைவியை தாக்கிய தி.மு.க. கவுன்சிலர் ரவி மற்றும் அவரது நண்பர்கள் பார்த்திபன், முருகேசன், துரைசாமி, ஆகியோரை கைது செய்தனர்.
- போலீசார் கைது செய்யப்பட்ட தி.மு.க. கவுன்சிலர் ரவி உள்பட அவரது நண்பர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடைரோட்டை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 46). இவர்கள் அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரி வளாகத்தில் மளிகை கடை நடத்தி வருகின்றனர்.
சம்பவத்தன்று இவரது கடைக்கு காரமடை பஞ்சாயத்து யூனியன் தி.மு.க. கவுன்சிலர் ரவி (50), அவரது நண்பர்களான சிக்கதாசம்பாளையத்தை சேர்ந்த பார்த்திபன் (35), முருகேசன் (53), துரைசாமி ஆகியோர் வந்தனர். அவர்கள் கடையில் இருந்த ஜெயலட்சுமியிடம் சிகரெட் கேட்டு வாங்கினர். அதற்கான பணத்தை கடையின் உரிமையாளர் கணேசன் கேட்டார். அவர்கள் பணம் கொடுக்க மறுத்து அவரிடம் தகராறு செய்தனர்.
அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த கவுன்சிலர் ரவி தனது நண்பர்களுடன் சேர்ந்து மளிகைகடைகாரர் கணேசன், அவரது மனைவி ஜெயலட்சுமி ஆகியோரை தாக்கினர். மேலும் மளிகைகடையையும் சேதப்படுத்தி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து ஜெயலட்சுமி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் மளிகைக்கடை காரர் மற்றும் அவரது மனைவியை தாக்கிய தி.மு.க. கவுன்சிலர் ரவி மற்றும் அவரது நண்பர்கள் பார்த்திபன், முருகேசன், துரைசாமி, ஆகியோரை கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் கைது செய்யப்பட்ட தி.மு.க. கவுன்சிலர் ரவி உள்பட அவரது நண்பர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்