search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    5 நாட்களுக்கு பிறகு சரிந்த தங்கம் விலை
    X

    5 நாட்களுக்கு பிறகு சரிந்த தங்கம் விலை

    • சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.520 குறைந்தது. ரூ.37 ஆயிரத்து 920-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.4 ஆயிரத்து 740 ஆக உள்ளது.
    • தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.2 ஆயிரம் குறைந்து ரூ.62 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.62.50 விற்கப்படுகிறது.

    சென்னை:

    தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு கடந்த 1-ந்தேதி 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியது.

    இதையடுத்து தங்கம் பவுன் தொடர்ந்து உயர்வை சந்தித்தது. 1-ந்தேதி ஒரே நாளில் பவுனுக்கு ரூ.856 அதிகரித்து ரூ.38 ஆயிரத்து 280-க்கு விற்றது.

    அதன்பின் தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தபடியே இருந்தது. நேற்று பவுனுக்கு ரூ.56 அதிகரித்து ரூ.38 ஆயிரத்து 440-க்கு விற்பனை ஆனது. கடந்த 5 நாட்களில் பவுனுக்கு ரூ.1,016 உயர்ந்தது.

    இந்த நிலையில் தங்கம் விலை இன்று கணிசமான அளவுக்கு குறைந்தது.

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.520 குறைந்தது. ரூ.37 ஆயிரத்து 920-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.4 ஆயிரத்து 740 ஆக உள்ளது.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.2 ஆயிரம் குறைந்து ரூ.62 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.62.50 விற்கப்படுகிறது.

    5 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை குறைந்து பவுன் மீண்டும் ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. இது நடுத்தர, ஏழை மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

    Next Story
    ×