search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அருமனை அருகே கிறிஸ்தவ ஆலயம் முன்பு திடீர் மறியல்: 19 பேர் கைது- போலீஸ் குவிப்பு
    X

    அருமனை அருகே கிறிஸ்தவ ஆலயம் முன்பு திடீர் மறியல்: 19 பேர் கைது- போலீஸ் குவிப்பு

    • போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து மறியலில் ஈடுபட்டனர்.
    • மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த 19 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அருமனை:

    அருமனையை அடுத்த சிதறால் பகுதியில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்று உள்ளது.

    இந்த ஆலயம் முன்பு இன்று இந்து முன்னணி அமைப்பினர் திடீரென திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் அங்கு விநாயகர் சிலையையும் வைத்தனர்.

    இதனால் அந்த பகுதியில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. தகவல் அறிந்து அருமனை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த 19 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை அந்த பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். இச்சம்பவம் காரணமாக இன்று அருமனை மற்றும் சிதறால் பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

    Next Story
    ×