search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஒகேனக்கல்லில் நீர்வரத்து 16 ஆயிரம் கன அடியாக சரிவு
    X

    ஒகேனக்கல்லில் நீர்வரத்து 16 ஆயிரம் கன அடியாக சரிவு

    • நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் காவிரி ஆற்றுப்பகுதிகளில் குளிக்கவும் பரிசல் சவாரி செய்யவும் மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டது.

    ஒகேனக்கல்:

    காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சில தினங்களாக நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து சில தினங்களாக நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் தொடர்ந்து 3 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வந்தது.

    இதனால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 18,000 கன அடியாக நீடித்து வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று மழை குறைந்ததால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இன்று சற்று சரிந்து வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    மேலும் நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடிக்கும் மேல் அதிகரித்து வருவதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் காவிரி ஆற்றுப்பகுதிகளில் குளிக்கவும் பரிசல் சவாரி செய்யவும் மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டது. இந்த தடையானது தொடர்ந்து இன்று 8-வது நாளாக நீடித்து வருகிறது.

    தமிழகம் மற்றும் கர்நாடகா எல்லை பகுதிகளிலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை அளவு குறைவதும், அதிகரிப்பதுமாக இருப்பதால், பிலிக்குண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×