search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கடத்தூர் அருகே மனைவியை கத்தியால் வெட்டிய கணவன் கைது
    X

    கடத்தூர் அருகே மனைவியை கத்தியால் வெட்டிய கணவன் கைது

    • கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • வைத்தீஸ்வரியின் தாய் மகேஸ்வரி கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் கடத்தூரை அடுத்த ஜக்கானபட்டியைச் சேர்ந்தவர் காமராஜ் (வயது35). இவரது மனைவி வைத்தீஸ்வரி (28). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் வைத்தீஸ்வரி கோபித்துக் கொண்டு சில்லாரஅள்ளியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு 2மகன்களையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.

    கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த வைத்தீஸ்வரி வருமானத்துக்காக கடத்தூரில் உள்ள ஒரு மெடிக்கல் கடையில் வேலை பார்த்து வந்தார். இதுகுறித்து தகவலறிந்த காமராஜ் நேற்று வைத்தீஸ்வரி வேலை செய்யும் மெடிக்கல் கடைக்கு சென்றார்.

    அங்கு அவரிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த காமராஜ் தான் மறைத்தி வைத்திருந்த கத்தியை எடுத்து வைத்தீஸ்வரியை சரமாரியாக தலை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டினார்.

    இதில் பலத்த காயம் அடைந்த வைத்தீஸ்வரி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து வைத்தீஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து வைத்தீஸ்வரியின் தாய் மகேஸ்வரி கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காமராஜை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×