search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையில் ஓட ஓட விரட்டி வாலிபர் வெட்டிக்கொலை
    X

    மதுரையில் ஓட ஓட விரட்டி வாலிபர் வெட்டிக்கொலை

    • ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இன்று மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் சோலையழகுபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் விஜய ராஜன். இவரது மகன் ஆனந்தகுமார் (வயது 22). பால் கறந்து கொடுக்கும் வேலை பார்த்து வந்த அவர், இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் பள்ளம் மீனாட்சி தியேட்டர் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கும்பல் ஆனந்தகுமாரை வழி மறித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓட முயன்றார்.

    ஆனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் ஆனந்த குமாரை விடாமல் துரத்தி சென்று நடுரோட்டில் ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரி வெட்டினர். இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. பட்டப்பகலில் நடுரோட்டில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தெற்குவாசல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த ஆனந்தகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனந்தகுமார் கொலை செய்யப்பட்டது ஏன்? அவரை கொன்றவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் மதுரை சித்திரை திருவிழாவின் போது ஆனந்தகுமார் தரப்பினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டதும், இதனால் அவர்களுக்குள் கடுமையான மோதல் நடந்ததும் தெரியவந்தது.

    அந்த மோதல் சம்பவத்தின் முன்விரோதம் காரணமாக ஆனந்தகுமாரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆனந்தகுமார் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நேரம் பகல் நேரத்தில் எப்போதும் ஆள்நடமாட்டம் அதிகமாக உள்ள இடமாகும். இன்றும் அதேபோல் அந்த வழியாக ஏராளமானோர் சென்றபடி இருந்தனர்.

    அந்த நேரத்தில் ஆனந்த குமாரை கொலையாளிகள் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தனர். ஆனந்த குமாரை மர்ம நபர்கள் வெட்டியதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பயத்தில் அலறியடித்தபடி அங்கிருந்து சிதறி ஓடினர்.

    ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இன்று மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×