search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மேலூர் அருகே நடுரோட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் வாலிபர் சிக்கினார்- மேலும் ஒருவருக்கு வலைவீச்சு
    X

    மேலூர் அருகே நடுரோட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் வாலிபர் சிக்கினார்- மேலும் ஒருவருக்கு வலைவீச்சு

    • பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க, அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர்.
    • தலைமறைவாக உள்ள மற்றொரு வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    மேலூர்:

    மேலூர்-சிவகங்கை சாலையில் மலம்பட்டி நான்கு வழிச்சாலை பாலத்திற்கு கீழே நேற்று மாலை 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அவர்கள் மதுபோதையில் இருந்துள்ளனர்.

    பின்னால் அமர்ந்திருந்தவர் கையில் பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் வைத்திருந்தார். மேலும் 2 மதுபாட்டில்களில் பெட்ரோலை நிரப்பி திரி போட்டு அதனை மோட்டார் சைக்கிளில் பவுச்சில் வைத்திருந்தனர்.

    பாலத்தின் கீழே சென்ற போது அங்கிருந்த வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கிய போது, பவுச்சில் இருந்த ஒரு பெட்ரோல் நிரப்பிய பாட்டில் கீழே விழுந்து நொறுங்கியது. இது தொடர்பாக அந்த வாலிபர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    அப்போது ஆத்திரமடைந்த ஒரு வாலிபர், பவுச்சில் இருந்த மற்றொரு பாட்டிலை எடுத்து அதிலிருந்த திரியில் தீயை பற்ற வைத்து தூக்கி வீசியுள்ளார். அது வெடித்துசிதறி சாலையோரத்தில் விழுந்து தீப்பற்றியது.

    இதனை பார்த்து அச்சமடைந்த அந்த வாலிபர்கள், தீயை அணைத்து விட்டு அங்கிருந்து வேகமாக தப்பி சென்றனர். பெட்ரோல் குண்டு வெடித்ததில் அதனை கொண்டுவந்த வாலிபர்கள் இருவருக்கும் காயமும் ஏற்பட்டிருக்கிறது.

    இந்த சம்பவத்தை பார்த்தவர்கள், அதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மேலூர் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.

    பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க, அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை கைப்பற்றி தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது பெட்ரோல் குண்டு வீசிய 2 வாலிபர்களின் உருவம் அதில் பதிவாகி இருந்தது.

    மேலும் அவர்கள் சென்ற வாகனத்தின் எண் தெளிவாக தெரியவந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரித்ததில், ஒரு வாலிபர் போலீசிடம் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர்கள் இருவரும் திருப்பத்தூருக்கு சென்றது தெரியவந்தது.

    அவர்கள் மோட்டார் சைக்கிளில் எதற்காக பெட்ரோல் மற்றும் பெட்ரோல் குண்டுகளை கொண்டு சென்றனர்? ஏதேனும் சதித்திட்டத்துடன் சென்றார்களா? என்று அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×