search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பண்ணாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர் மரணம்
    X

    பண்ணாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர் மரணம்

    • ஈரோடு மாவட்டம் பண்ணாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட காளிசாமி வந்திருந்தார்.
    • சாமி கும்பிட்டவர் கோவில் பிரகாரத்தில் உட்கார்ந்திருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.

    ஈரோடு:

    கோவை மாவட்டம் குருடம்பாளையம், நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் காளிசாமி (57). இவர் தனது மகன் பாலசுப்பிரமணியனுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பண்ணாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட காளிசாமி வந்திருந்தார். சாமி கும்பிட்ட அவர் கோவில் பிரகாரத்தில் உட்கார்ந்திருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.

    அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே காளிசாமி இறந்துவிட்டதாக கூறினார்.

    இது குறித்து காளிசாமியின் மகன் பாலசுப்பிரமணி அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×