என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சூலூர் அருகே மாரியம்மன் கண்திறந்து கண்ணீர் வடித்ததாக பரபரப்பு பக்தர்கள் பரவசம்
- கடந்த வெள்ளிக்கிழமை வழக்கம்போல் கோவிலின் பூசாரி பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்து மாரியம்மன் சிலையை தண்ணீர் ஊற்றி கழுவி கொண்டிருந்தார்.
- அப்போது சிறுமி ஒருவர் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக வந்தார். அப்போது மாரியம்மனின் வலது கண் திறந்திருப்பதாக பூசாரியிடம் தெரிவித்தார்.
நீலாம்பூர்:
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த செலக்கரச்சல் அருகே உள்ள திம்மநாயக்கன்பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது.
30 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதுதவிர அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கும்.
கடந்த வெள்ளிக்கிழமை வழக்கம்போல் கோவிலின் பூசாரி பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்து மாரியம்மன் சிலையை தண்ணீர் ஊற்றி கழுவி கொண்டிருந்தார்.
அப்போது சிறுமி ஒருவர் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக வந்தார். அப்போது மாரியம்மனின் வலது கண் திறந்திருப்பதாக பூசாரியிடம் தெரிவித்தார்.
அதனைப் பார்த்த பூசாரி பக்தி பரவசத்துடன் அம்மனை அலங்கரித்து பூஜைகளை செய்துள்ளார்.
பின்னர் வீட்டிற்கு சென்ற அந்த சிறுமி நடந்துவற்றை தனது தந்தையிடமும், அக்கம்பக்கத்தினரிடமும் தெரிவித்தார்.
அம்மன் கண் திறந்திருப்பதை கேள்விப்பட்டு அவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
இந்த தகவலானது அந்த கிராமம் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது.
இதையடுத்து திம்மநாயக்கன்பாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் கோவிலுக்கு வர தொடங்கினர். கோவிலில் மாரியம்மன் வலது கண் திறந்து இருப்பதாகவும், கண்ணில் இருந்து கண்ணீர் வடித்ததாகவும் பக்தர்கள் பரவசத்துடன் கூறினர்.
இதனை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களிலும் பரவவிட்டனர். தற்போது இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை அடுத்து சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக வந்து மாரியம்மனை வழிபட்டு செல்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த மூன்று நாட்களாக மாரியம்மனின் கண் திறந்து இருப்பதாகவும் வலது கண்ணில் நீர் வடிவதாகவும் இது எங்களுக்கு ஆச்சரியமாகவும் உள்ளது என பக்தி பரவசத்துடன் அவர்கள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்