search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மொரப்பூர் அருகே லாரி மோதி விபத்து: காயமடைந்த மத்திய ரிசர்வ் போலீஸ்காரர் சிகிச்சை பலனின்றி பலி
    X

    மொரப்பூர் அருகே லாரி மோதி விபத்து: காயமடைந்த மத்திய ரிசர்வ் போலீஸ்காரர் சிகிச்சை பலனின்றி பலி

    • பூவரசன் மத்திய ரிசர்வ் படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.
    • மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் மொரப்பூர் எலவடை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னராஜ்.

    இவரது மகன் பூவரசன் (வயது27). இவரது இவருக்கு திருமணமாகி அபிராமி என்ற மனைவியும், ஒரு மகளும், 3 மாதம் ஆனநிலையில் ஒரு மகனும் உள்ளனர்.

    பூவரசன் மத்திய ரிசர்வ் படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் விடுமுறையில் கடந்த 9 மாதங்களுக்கு சொந்த ஊருக்கு வந்தார். சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் பூவரசன் மொரப்பூரில் இருந்து கல்லாவிக்கு சென்றார். அப்போது கல்லாவி சாலையில் வழியாக வந்தபோது லாரி ஒன்று அவர் மீது மோதியது. இதில் காயமடைந்த பூவரசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சகை்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் படை போலீஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த பூவரசன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×