என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மொரப்பூர் அருகே லாரி மோதி விபத்து: காயமடைந்த மத்திய ரிசர்வ் போலீஸ்காரர் சிகிச்சை பலனின்றி பலி
- பூவரசன் மத்திய ரிசர்வ் படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.
- மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் எலவடை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னராஜ்.
இவரது மகன் பூவரசன் (வயது27). இவரது இவருக்கு திருமணமாகி அபிராமி என்ற மனைவியும், ஒரு மகளும், 3 மாதம் ஆனநிலையில் ஒரு மகனும் உள்ளனர்.
பூவரசன் மத்திய ரிசர்வ் படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் விடுமுறையில் கடந்த 9 மாதங்களுக்கு சொந்த ஊருக்கு வந்தார். சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் பூவரசன் மொரப்பூரில் இருந்து கல்லாவிக்கு சென்றார். அப்போது கல்லாவி சாலையில் வழியாக வந்தபோது லாரி ஒன்று அவர் மீது மோதியது. இதில் காயமடைந்த பூவரசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சகை்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் படை போலீஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த பூவரசன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்