search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை தடுப்பு சுவரில் மோதல்- மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
    X

    சாலை தடுப்பு சுவரில் மோதல்- மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

    • தலையில் பலத்த காயம் அடைந்த வசந்தகுமார் பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவொற்றியூர்:

    எண்ணூர், தாழங்குப்பம், அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 35). இவர் போரூரில் உள்ள தனியார் கம்பெனியில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு அவர் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    எண்ணூர் கடற்கரை சாலையில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த வசந்தகுமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×