என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அசோக் நகரில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்: என்ஜினீயர் உயிரிழப்பு
- மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற மோகன்ராஜ் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
- பலத்த காயமடைந்த சூர்யகிருஷ்ணா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
போரூர்:
சென்னை மேற்கு மாம்பலம், பரோடா தெரு பகுதியை சேர்ந்தவர் சூர்யகிருஷ்ணா (வயது21) என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் தனது நண்பர் மோகன்ராஜூடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து கிண்டி நோக்கி நூறடி சாலையில் சென்று கொண்டிருந்தார். அசோக்நகர் காசி தியேட்டர் அருகே வந்தபோது மற்றொரு மோட்டார் சைக்கிள் மோகன்ராஜின் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் நிலை தடுமாறிய மோகன்ராஜ், சூர்யகிருஷ்ணா இருவரும் கீழே விழுந்தனர் இதில் தலையில் அடிபட்டு பலத்த காயமடைந்த சூர்யகிருஷ்ணா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற மோகன்ராஜ் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தகவல் அறிந்து சென்ற கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சூர்யகிருஷ்ணா உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தது யார் என்பது குறித்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்