search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    நெல்லையில் இன்று காலை நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் கார் மோதி 6 பேர் காயம்
    X

    நெல்லையில் இன்று காலை நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் கார் மோதி 6 பேர் காயம்

    • கார் மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை பகுதியை சேர்ந்தவர் பிரவீன்(வயது 28). இவர் தனது குடும்பத்தினருடன் ஒரு காரில் திருப்பதிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து அவர்கள் மீண்டும் குமரிக்கு திரும்பி வந்துக்கொண்டிருந்தனர்.

    காரை பிரவீன் ஓட்டி வந்தார். இந்நிலையில் இன்று காலை கார் நெல்லை கே.டி.சி.நகர் நான்கு வழிச்சாலை மேம்பாலம் அருகே வந்தபோது பிரவீன் தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் கார் மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் காரில் பயணித்த அவரது உறவினர்களான கலந்தபனையை சேர்ந்த செல்வி(36), பிரதீபா(36), டேவிட், சிறுமி ஆதரா ஸ்ரீ (7), காரை ஓட்டி வந்த பிரவீன், அவரது மனைவி சர்மின் விஜின்(27) ஆகியோர் காயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கார் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×