search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுவண்ணாரப்பேட்டையில் கோஷ்டி மோதலில் தொழிலாளிக்கு கத்தி வெட்டு- 6 பேர் காயம்
    X

    புதுவண்ணாரப்பேட்டையில் கோஷ்டி மோதலில் தொழிலாளிக்கு கத்தி வெட்டு- 6 பேர் காயம்

    • அஜய் தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்த வாலிபர்கள் அலெக்சிடம் தகராறில் ஈடுபட்டனர்.
    • மோதலில் அலெக்சின் மகன், அஜய், அவரது நண்பர்கள் உள்பட மேலும் 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    புதுவண்ணாரப்பேட்டை, வ.உ.சி. நகரை சேர்ந்தவர் அலெக்ஸ் (45). தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அஜய் என்பவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் அலெக்சின் மகன்களிடம் அஜய் மோதலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    இதனை அலெக்ஸ் கண்டித்து அஜய்யை தாக்கினார். இதுகுறித்து அஜய் தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்த வாலிபர்கள் அலெக்சிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் அஜய்க்கு கத்தி வெட்டு விழுந்தது. அவர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த மோதலில் அலெக்சின் மகன், அஜய், அவரது நண்பர்கள் உள்பட மேலும் 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    Next Story
    ×