என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வயல் வெளியில் வாழைத்தாருடன் கவிழ்ந்து கிடந்த லாரியால் பரபரப்பு
- மணக்கரையில் இருந்து ஆறாம்பண்ணை செல்லும் சாலையில் இருபுறமும் வயல்வெளிகள் உள்ளது.
- வயல்வெளியில் வாழைத்தார் ஏற்றி வந்த லாரி ஒன்று கவிழ்ந்து கிடந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
செய்துங்கநல்லூர்:
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மணக்கரையில் இருந்து ஆறாம்பண்ணை செல்லும் சாலையில் இருபுறமும் வயல்வெளிகள் உள்ளது.
இந்த வயல்வெளியில் வாழைத்தார் ஏற்றி வந்த லாரி ஒன்று கவிழ்ந்து கிடந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அருகில் சென்று பார்த்தபோது, படப்பிடிப்புக்காக தற்காலிகமாக அந்த லாரியை கவிழ்த்து வைத்து இருந்தது தெரிய வந்தது. ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளத்தை சேர்ந்த திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன் படம் மூலம் பிரபலமானவர். இவர் தற்போது 'வாழை' என பெயரிடப்பட்ட ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நடந்து வருகிறது.
இந்த படத்தின் ஒரு காட்சியாக வாழைத்தார் ஏற்றி வந்த லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாவது போல் படமாக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது தெரியவந்தது. அதன்பின்னரே அந்த வழியாக சென்றவர்களுக்கு முழு விபரம் தெரியவந்தது.
எனினும் இதனை அந்த வழியாக செல்பவர்கள் எல்லோரும் ஒருவித பதற்றத்துடனே பார்த்து சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்