என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
திருத்தணி அருகே வி.ஏ.ஓ.வை பணி செய்ய விடாமல் தடுத்த ஊராட்சி தலைவியின் கணவர் கைது
- கிராம நிர்வாக அலுவலர் ரகுவரன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதன் தொடர்ச்சியாக கிராமநிர்வாக அலுவலர் ரகுவரனுக்கு தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
- மோசடி தொடர்பாக ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
திருத்தணி:
திருத்தணி அடுத்த அருங்குளம் ஊராட்சி தலைவராக இருப்பவர் சரண்யா. இவரது கணவர் முரளி. அ.தி.மு.க பிரமுகர்.
ஊராட்சி கிராம நிர்வாக அலுவலராக (பொறுப்பு) ரகுவரன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரை ஊராட்சி தலைவியின் கணவர் முரளி அடிக்கடி திட்டி பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. மே1-ந்தேதி நடந்த கிராமசபை கூட்டத்தில் முரளி தலையீடு இருந்ததாக தெரிகிறது.
இதற்கு கிராம நிர்வாக அலுவலர் ரகுவரன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதன் தொடர்ச்சியாக கிராமநிர்வாக அலுவலர் ரகுவரனுக்கு தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ரகுவரன் திருவாலங்காடு போலீசில் புகார் செய்தார். மேலும் மோசடி புகாரும் கொடுத்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து ஊராட்சி தலைவி சரண்யாவின் கணவர் முரளியை போலீசார் கைது செய்தனர். மேலும் மோசடி தொடர்பாக ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்