search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நத்தம் அருகே ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுத்ததால் பொதுமக்கள் சாலை மறியல்
    X

    நத்தம் அருகே ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுத்ததால் பொதுமக்கள் சாலை மறியல்

    • பொதுமக்கள் நாளை கண்டிப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தியே ஆக வேண்டும் என கூறினர்.
    • சாலை மறியலில் ஈடுபட்ட பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அய்யாபட்டியில் காளியம்மன், கருப்புசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெறும். அதன்படி நாளை (12-ந்தேதி) ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டன. வாடிவாசல் அமைத்தல், பார்வையாளர்களுக்கான கேலரி உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருந்த நிலையில் ஆர்.டி.ஓ பார்வையிட இன்று வருகை தந்தார்.

    அப்போது வாடிவாசல் பகுதி ஈரமாக இருப்பதால் பாதுகாப்பு குறைபாடு உள்ளது எனக்கூறி அடுத்தவாரம் நடத்திக்கொள்ளலாம் எனக்கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்ட நிலையில் எதற்காக அனுமதி தர மறுக்கிறீர்கள் என கூறி அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலைமறியல் செய்தனர்.

    இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாசில்தார் சுகந்தி மற்றும் நத்தம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் நாளை கண்டிப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தியே ஆக வேண்டும் என கூறினர். இதனிடையே சாலை மறியலில் ஈடுபட்ட பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார்.

    அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அதிகாரிகளின் சமரசத்தை ஏற்க மறுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    Next Story
    ×