search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    25-ல் இருந்து 15....! பா.ஜனதா கணக்கில் உதைக்கிறதே !
    X

    25-ல் இருந்து 15....! பா.ஜனதா கணக்கில் உதைக்கிறதே !

    • எடப்பாடி பழனிசாமி உடன்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
    • கூட்டணி கட்சிகளும் ஒத்துழைப்பு தரும் என்று நம்புவதாக கூறினார்.

    தமிழகத்தில் பா.ஜனதா 25 தொகுதிகளில் போட்டியிடும் என்று அண்ணாமலை அடித்து சொன்னார். ஆனால் தேர்தல் பேச்சு எழ தொடங்கியதும் பேச்சிலும் மாற்றம் வர தொடங்கி இருக்கிறது. சமீபத்தில் டெல்லி சென்று பேச்சு வார்த்தை நடத்திய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பா.ஜனதா தலைமை 20 தொகுதி கேட்டு இருப்பதாகவும், அதற்கு எடப்பாடி பழனிசாமி உடன்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பா.ஜனதா துணை தலைவர் வி.பி.துரைசாமி 'எப்படியும் 15 தொகுதிகளில் போட்டியிடுவோம். அதற்கு கூட்டணி கட்சிகளும் ஒத்துழைப்பு தரும் என்று நம்புவதாக கூறினார்.

    25-ல் இருந்து 15 ஆக குறைந்து இருக்கிறது. தேர்தல் நெருங்கும் போது இன்னும் குறையுமோ என்று தாமரை சொந்தங்கள் சந்தேகிக்கிறார்கள். அரசியலில் எதுவும் நடக்கலாமே.

    Next Story
    ×