என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ராஜபாளையம் அருகே செங்கல் சூளை உரிமையாளர் வெட்டிக்கொலை
- மது போதையில் இருந்த அவர், ரெங்கசாமியுடன் தகராறு செய்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் யாதவர் வடக்கு தெருவில் வசித்து வந்தவர் ரெங்கசாமி (வயது 63). இவருக்கு மனைவியும், 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
இவருக்கும், அவரது சித்தப்பா மகனுக்கும் சொத்து தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை ரெங்கசாமி தனக்கு சொந்தமான செங்கல் சூளையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, அங்கு ஒரு மர்ம நபர் வந்தார். மது போதையில் இருந்த அவர், ரெங்கசாமியுடன் தகராறு செய்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.
இதுபற்றி சேத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த கொலை சம்பவம் பற்றி அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், ராஜபாளையம் டி.எஸ்.பி. பிரீத்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட முதியவர் ரெங்கசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், மது போதையில் இருந்த வாலிபர் ரெங்கசாமியை கொலை செய்ததாக தெரியவந்தது. ஆனால் ரெங்கசாமியின் உறவினர்கள் கூறுகையில், ரெங்கசாமிக்கும், அவரது சித்தப்பா மகனுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாகவும், அவர்கள்தான் கூலிப் படையை வைத்து ரெங்கசாமியை கொலை செய்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்