search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ரவுடியின் இறுதி சடங்கில் பங்கேற்ற தொழிலாளி அடித்துக் கொலை
    X

    ரவுடியின் இறுதி சடங்கில் பங்கேற்ற தொழிலாளி அடித்துக் கொலை

    • ரவுடியின் இறுதி சடங்கில் பங்கேற்க வந்த தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கொருக்குப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் யுவராஜ் வழக்கு பதிவு செய்து கமலக்கண்ணனை கைது செய்தனர்.

    திருவொற்றியூர்:

    பழைய வண்ணாரப்பேட்டை, ஆரணி ரங்கன் தெருவை சேர்ந்தவர் குமார் என்கிற கருப்பு குமார்.

    ரவுடியான இவர் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. நேற்று முன்தினம் குமார் காலையில் வீட்டில் இருந்து ஆரணி கங்கன் தெரு வழியாக நடந்து சென்றார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் குமாரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பழைய வண்ணாரப்பேட்டை வள்ளுவன் தெருவை சேர்ந்த ஆகாஷ் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.

    கடந்த 2013-ம் ஆண்டு நடந்த ஆகாஷின் தந்தை கொலைக்கு பழிக்குப் பழியாக 10 ஆண்டு காத்திருந்து குமார் தீர்த்து கட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் ரவுடி குமாரின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் திருவொற்றியூரை சேர்ந்த ராஜசேகர் (வயது42) என்பவர் பங்கேற்றார். பின்னர் அவரும் கொலையுண்ட ரவுடி குமாரின் உறவினரான கமலக்கண்ணனும் அருகில் உள்ள பழைய கட்டிடத்தின் மாடியில் சென்று மதுகுடித்தனர்.

    அப்போது இருவருக்கும் இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கமலக்கண்ணன் சரமாரியாக ராஜசேகரை தாக்கினார். மேலும் அருகில் கிடந்த கல்லை ராஜசேகரின் தலையில் தூக்கி போட்டு விட்டு சென்று விட்டார்.

    இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட ராஜசேகரின் தலையில் இருந்து ரத்தம் வெளியேறி மயங்கினார். இதனை அங்கிருந்த யாரும் கவனிக்க வில்லை. நேற்று காலை அக்கம்பக்கத்தினர் அப்பகுதிக்கு சென்ற போது ரத்த வெள்ளத்தில் ராஜசேகர் உயிருக்கு போராடிய படி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக அவரை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி ராஜசேகர் பரிதாபமாக இறந்து போனார்.

    இந்த கொலை குறித்து குறித்து கொருக்குப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் யுவராஜ் வழக்கு பதிவு செய்து கமலக்கண்ணனை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    ரவுடியின் இறுதி சடங்கில் பங்கேற்க வந்த தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×