search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவில் அருகே பெண் கொலை: நடத்தையில் சந்தேகப்பட்டதால் மனைவியை கொன்றேன்- கைதான கணவர் வாக்குமூலம்
    X

    சங்கரன்கோவில் அருகே பெண் கொலை: நடத்தையில் சந்தேகப்பட்டதால் மனைவியை கொன்றேன்- கைதான கணவர் வாக்குமூலம்

    • கணவன்-மனைவி இருவரும் ஒரே வீட்டில் வசித்தாலும் கடந்த 2 ஆண்டுகளாக பேசாமல் இருந்து வந்தனர்.
    • கணவன்-மனைவி இடையே ஒருவர் மீது ஒருவர் நடத்தையில் சந்தேகப்பட்டு பிரச்சினை செய்துள்ளனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள வடக்கு அழகு நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் மகாகிருஷ்ணன் (வயது 40). டிரைவர்.. இவருடைய மனைவி கனகாதேவி (32). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    மகாகிருஷ்ணனும், கனகா தேவியும் ஒருவரையொருவர் சந்தேகப்பட்டு அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதனால் கணவன்-மனைவி இருவரும் ஒரே வீட்டில் வசித்தாலும் கடந்த 2 ஆண்டுகளாக பேசாமல் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டதால் வாக்குவாதம் முற்றியதில், கனகாதேவியை மகா கிருஷ்ணன் வெட்டிக்கொலை செய்து அப்பகுதியில் ஒரு பிச்சிப்பூ தோட்டத்தில் வீசினார். அவரது முகத்தையும் அடையாளம் தெரியாதபடி சிதைத்தார். பின்னர் தலைமறைவானார்.

    இதுகுறித்து குருவிகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப்பதிவு செய்தார். அவரது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளியை தேடி வந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில், கணவன்-மனைவி இடையே ஒருவர் மீது ஒருவர் நடத்தையில் சந்தேகப்பட்டு பிரச்சினை செய்துள்ளனர். நேற்று முன்தினம் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. உடனே கனகாதேவி, சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மகாகிருஷ்ணனை அழைத்து விசாரணை நடத்தி, அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதனால் கோபம் அடைந்த மகாகிருஷ்ணன் வீட்டுக்கு சென்றதும், மனைவி கனகாதேவியுடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார். அப்போது ஆத்திரத்தில் அவர் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கூறிய தகவல்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×