search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சோளிங்கரில் சென்னை தபால் நிலைய அலுவலர் மர்ம மரணம்
    X

    சோளிங்கரில் சென்னை தபால் நிலைய அலுவலர் மர்ம மரணம்

    • ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஐப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன்,
    • சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் எப்படி இறந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஐப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 55).

    இவர் சென்னையில் தபால் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவரது விவசாய நிலம் ஐப்பேட்டில் உள்ளது. அங்கு சென்று வருவதாக நேற்று வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார்.

    இந்நிலையில் இரவு 9 மணியளவில் அதே கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் அருகே மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து தகவல் அறிந்த சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் எப்படி இறந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×