search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பஸ்சுக்காக காத்திருந்த பெண் பலி
    X

    பஸ்சுக்காக காத்திருந்த பெண் பலி

    • விபத்தில் பலத்த காயம் அடைந்த 2 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த வலசைவெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் துளசி (58). இவர் நேற்று மதியம் போளிவாக்கள் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.

    அப்போது அந்த வழியாக திருவள்ளூரிலிருந்து ஸ்ரீபெரும்புதுார் நோக்கி வந்த காரும் எதிரே திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனமும் மோதிய விபத்தில் சாலையோரம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த துளசி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் துளசி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இருசக்கர வாகனத்தில் வந்த கம்மவார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த செல்வமணி (48) சதானந்தம் (35) இருவரும் பலத்த காயம் ஏற்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    Next Story
    ×