என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
திருவள்ளூரில் லாரி டிரைவரிடம் வழிப்பறி- மர்ம கும்பல் துணிகரம்
- அரிசி ஆலை அருகில் உள்ள சுடுகாடு அருகே சென்று கொண்டிருந்த போது அங்குவந்த மர்ம கும்பல் லாரியை வழிமறித்து நிறுத்தினர்.
- இளவரசன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் பத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன்.லாரி டிரைவர். இவர் நேற்று இரவு பனப்பாக்கம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து 23 டன் நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு திருவள்ளூர் தனியார் அரிசி ஆலைக்கு லாரியை ஓட்டிச்சென்றார்.
அரிசி ஆலை அருகில் உள்ள சுடுகாடு அருகே சென்று கொண்டிருந்த போது அங்குவந்த மர்ம கும்பல் லாரியை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் டிரைவர் ஆனந்தனை தாக்கி கத்தி முனையில் மிரட்டி ரூ.5 ஆயிரத்தை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் வழிப்பறியில் ஈடுபட்டது, வள்ளுவர்புரத்தைச் சேர்ந்த இளவரசன், ஈக்காடு பகுதியைச் சேர்ந்த யுவராஜ், வீரராகவபுரம் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பது தெரிந்தது.
இதையடுத்து இளவரசன் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்