search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருவள்ளூரில் லாரி டிரைவரிடம் வழிப்பறி- மர்ம கும்பல் துணிகரம்
    X

    திருவள்ளூரில் லாரி டிரைவரிடம் வழிப்பறி- மர்ம கும்பல் துணிகரம்

    • அரிசி ஆலை அருகில் உள்ள சுடுகாடு அருகே சென்று கொண்டிருந்த போது அங்குவந்த மர்ம கும்பல் லாரியை வழிமறித்து நிறுத்தினர்.
    • இளவரசன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் பத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன்.லாரி டிரைவர். இவர் நேற்று இரவு பனப்பாக்கம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து 23 டன் நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு திருவள்ளூர் தனியார் அரிசி ஆலைக்கு லாரியை ஓட்டிச்சென்றார்.

    அரிசி ஆலை அருகில் உள்ள சுடுகாடு அருகே சென்று கொண்டிருந்த போது அங்குவந்த மர்ம கும்பல் லாரியை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் டிரைவர் ஆனந்தனை தாக்கி கத்தி முனையில் மிரட்டி ரூ.5 ஆயிரத்தை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் வழிப்பறியில் ஈடுபட்டது, வள்ளுவர்புரத்தைச் சேர்ந்த இளவரசன், ஈக்காடு பகுதியைச் சேர்ந்த யுவராஜ், வீரராகவபுரம் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பது தெரிந்தது.

    இதையடுத்து இளவரசன் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×