search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி
    X

    திருவள்ளூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

    • பலத்த காயம் அடைந்த வெங்கடாசலபதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • விபத்து குறித்து மணவாளநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த வெங்கத்தூர், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சேர்ந்தவர் மணி. இவரது மகன்கள் நரசிம்மன்(38), வெங்கடாசலபதி (33). இவர்களது மைத்துனர் ராஜேந்திரன்(37). அனைவரும் பெயிண்டராக வேலைபார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் வெங்கடா சலபதி உள்பட 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் நோக்க சென்றனர். அப்போது வேப்பம்பட்டு பகுதியில் இருந்து கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று வெங்கத்தூர் நோக்கி வந்தது. அப்போது சரக்கு வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த வெங்கடாசலபதி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது அண்ணன் நரசிம்மன், மைத்துனர் ராஜேந்திரன் ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    தகவல் அறிந்ததும் மணவாளநகர் போலீஸ இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பாபி மற்றும் போலீசார் விரைந்து வந்து பலத்த காயம் அடைந்த ராஜேந்திரனை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கும், நரசிம்மனை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து மணவாளநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×