என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வில்லன்கள் போல் செயல்படும் எடப்பாடி பழனிசாமி கையில் அ.தி.மு.க. சிக்கியுள்ளது- டி.டி.வி. தினகரன்
- நீதிமன்ற தீர்ப்பில் எடப்பாடிக்கு சாதகமாக இரட்டை இலையும் அ.தி.மு.க.வும் வந்தால் அது அ.தி.மு.க.வை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும்.
- தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்றால் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை மத்திய அரசு நிறுத்தி கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டக்கூடாது.
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்த திட்டத்தையும் அனுமதிக்கக்கூடாது. மேலும் இந்த விஷயத்தில் தேவையற்ற அரசியல் செய்ய வேண்டாம்.
நீதிமன்ற தீர்ப்பில் எடப்பாடிக்கு சாதகமாக இரட்டை இலையும் அ.தி.மு.க.வும் வந்தால் அது அ.தி.மு.க.வை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும்.
ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி கையில் சிக்கிய அ.தி.மு.க. கட்சி அழிவு பாதையை நோக்கி செல்கிறது. எம்.ஜி.ஆர். கையில் இருந்த இரட்டை இலை சின்னம் சினிமா வில்லன்கள் நம்பியார், வீரப்பா கையில் கிடைத்தால் எப்படி இருக்குமோ அதுபோல் எடப்பாடி பழனிசாமி கையில் உள்ளது என்று மக்கள் நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.
இரட்டை இலை சின்னம், அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமிக்கு தான் சொந்தம் என்று வந்தால் அது இரட்டை இலைக்கும், அ.தி.மு.க. தொண்டர்களுக்கும் பிடித்த கெட்ட நேரம்.
கட்சியில் துரோகம் இழைத்ததால் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கினார். ஆனால் துரோகத்தின் மூலமாகவே பொறுப்புக்கு வந்த ஒருவரை இயற்கையும் அனுமதிக்காது. அவரை நிச்சயம் மக்கள் புறக்கணிப்பார்கள்.
தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்றால் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அம்மாவின் உண்மை தொண்டர்கள் இணைந்தால் தி.மு.க.வை நிச்சயமாக வீழ்த்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்