என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
உடுமலை அருகே பாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 வாலிபர்கள் பலி
- உயிருக்கு போராடிய ராகுலை ஆம்புலன்ஸ் உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
- குமரலிங்கம் பகுதியில் விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள குமரலிங்கம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய்(வயது 25). இவரது நண்பர் ராகுல் ( 24).2பேரும் உடுமலையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தனர். நேற்று இரவு வேலையை முடித்து விட்டு உடுமலையில் இருந்து குமரலிங்கத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
குமரலிங்கம் சாலை கருப்பட்டிபாளையம் என்ற இடத்தில் வளைவான பகுதியில் திரும்பியபோது ரோட்டில் இருந்த பாலத்தில் நிலை தடுமாறி மோதினர்.பின்னர் கீழே உள்ள வாய்க்காலில் விழுந்தனர். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் 2பேரையும் மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் சஞ்சய் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
உயிருக்கு போராடிய ராகுலை ஆம்புலன்ஸ் உதவியுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் உயிரிழந்தார். இது குறித்து உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குமரலிங்கம் பகுதியில் விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்