என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சசிகலா-ஓ.பி.எஸ் படங்களுடன் பரபரப்பு சுவரொட்டிகள்: எடப்பாடி ஆதரவாளர்கள் கிழிப்பதாக புகார்
- மதுரை பகுதிகளில் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன.
- சசிகலா-ஓ.பன்னீர்செல்வம் படங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மதுரை:
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடையே நாளுக்கு நாள் பிளவு வலுத்து வருகிறது. அ.தி.மு.க.வில் எழுந்துள்ள ஒற்றை தலைமை கோஷம் காரணமாக அந்த கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டும் முடிவுகளை அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் வருகிற 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டப்பட்டு பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை கொண்டு வரவும், பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பி.எஸ்.சை நீக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதனை முறியடிக்க ஓ.பன்னீர்செல்வமும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். தமிழகம் முழுவதும் பொதுக்குழு உறுப்பினர்களிடம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கடிதம் பெறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரை பகுதிகளில் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன.
சசிகலா-ஓ.பன்னீர்செல்வம் படங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மதுரை நகரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில், "அன்று சீதை வடித்த கண்ணீர் இலங்கையை அழிந்தது, இன்று சின்னம்மா வடிக்கும் கண்ணீரால் துரோகிகள் கூட்டம் ஒழியும், அம்மாவின் ஆயுதக்கிடங்கு சின்னம்மா" என்பது போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
சசிகலா படத்துடன் ஓ.பன்னீர்செல்வம் படத்தையும் சேர்த்து அச்சிடப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள் மதுரை புறநகர் பகுதிகளிலும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அ.தி.மு.க.வில் அடுத்த கட்டமாக என்னென்ன நிகழுமோ என்று தொண்டர்களும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.
இந்த நிலையில் புறநகர் பகுதிகளான நாகமலை புதுக்கோட்டை, கீழகுயில் குடி, திருப்பரங்குன்றம் மேலூர் பகுதிகளில் ஒட்டப்பட்ட இந்த சுவரொட்டிகளை அப்பகுதியை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி அணியினர் கிழித்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்