search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடுவாஞ்சேரி அருகே தென்னை மரத்தை அகற்றியபோது மின்கம்பம் முறிந்து விழுந்து இளம்பெண் பலி
    X

    கூடுவாஞ்சேரி அருகே தென்னை மரத்தை அகற்றியபோது மின்கம்பம் முறிந்து விழுந்து இளம்பெண் பலி

    • திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த உலகநாதன் மற்றும் அவரது மனைவி அபிராமி.
    • கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜே.சி.பி. எந்திரத்தை இயக்கிய டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கூடுவாஞ்சேரி:

    கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர், துலுக்கானத்தம்மன் கோவில் தெருவில் காரைக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பு பண்ணை உள்ளது.

    இங்கு திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த உலகநாதன் மற்றும் அவரது மனைவி அபிராமி(வயது30) ஆகியோர் 3 குழந்தைகளுடன் தங்கி மாந்தோப்பை பராமரித்து வருகின்றனர்.

    இந்நிலையில் மாந்தோப்புக்கு அருகே உள்ள நிலத்தில் முள்செடிகளை ஜே.சி.பி.எந்திரத்தால் அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது அங்கிருந்த தென்னை மரம் ஒன்றை அகற்ற முயன்றனர்.

    இதனை அபிராமி அருகே நின்று வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தார். ஜே.சி.பி எந்திரம் தென்னை மரத்தை அகற்றும் போது திடீரென அருகே இருந்த மின் வயர்கள் மீது சாய்ந்தது.

    இதில் அங்கிருந்த சிமெண்டால் ஆன மின்கம்பம் இரண்டாக முறிந்து அருகில் நின்று கொண்டிருந்த அபிராமி மீது விழுந்தது. மேலும் மினி வயர்களும் அறுந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது.

    மின்கம்பத்தின அடியில் சிக்கிய அபிராமி பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு கூடுவாஞ்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அபிராமி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜே.சி.பி. எந்திரத்தை இயக்கிய டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×