search icon
என் மலர்tooltip icon

    தேனி

    • கனமழையால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான கொட்டக்குடி, பீச்சாங்கரை, குரங்கணி, உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் பெய்த கன மழையால் கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.
    • கும்பக்கரை அருவியிலும் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. அருவியில் குளிக்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் தற்போது கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    நேற்று மாலை தொடங்கிய சாரல் மழை பின்னர் படிப்படியாக அதிகரித்து இரவில் கன மழையாக கொட்டி தீர்த்தது. பல இடங்களில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான கொட்டக்குடி, பீச்சாங்கரை, குரங்கணி, உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் பெய்த கன மழையால் கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணைப்பிள்ளையார் நீர் வீழ்ச்சியில் தடுப்புகளை தாண்டி தண்ணீர் செல்கிறது. பொதுமக்கள் அங்கு செல்லவோ, கால்நடைகளை அழைத்து செல்லவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சிறுவர்கள் அங்கு செல்வதை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதேபோல் பெரியகுளம் அருகில் உள்ள கும்பக்கரை அருவியிலும் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. இதனையடுத்து அருவியில் குளிக்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது.

    தொடர் மழை காரணமாக ஏற்கனவே மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகள் முழு கொள்ளளவை எட்டி அதில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல் முல்லைப்பெரியாறு மற்றும் வைகை அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 125.05 அடியாக உள்ளது. வரத்து 1565 கன அடி. திறப்பு 511 கனஅடி. இருப்பு 3629 மி.கன அடி.

    71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 65.12 அடியாக உள்ளது. வரத்து 885 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 4658 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 51.50 அடி. வரத்து மற்றும் திறப்பு 100 கன அடி. இருப்பு 366 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.60 அடி. அணைக்கு வரும் 129 கனஅடி முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடி.

    பெரியாறு 27.4, தேக்கடி 11.2, கூடலூர் 5.4, உத்தமபாளையம் 11.4, சண்முகாநதி அணை 6.6. போடி 5.8, வைகை அணை 30, மஞ்சளாறு 42, சோத்துப்பாறை 46, பெரியகுளம் 25, வீரபாண்டி 22.6, அரண்மனைப்புதூர் 6, ஆண்டிபட்டி 34.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • தேனி மாவட்டம் போடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் சாலைகளை ஆக்கிரமிப்பு செய்து 100-க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் செயல்பட்டு வந்தன.
    • ஆக்கிரமிப்பில் இயங்கிய ஆட்டு இறைச்சி கடைகள் நகராட்சி மூலம் அகற்றப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் சாலைகளை ஆக்கிரமிப்பு செய்து 100-க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் செயல்பட்டு வந்தன.

    ஆட்டு இறைச்சி விற்பதற்கும் கடை நடத்துவதற்கும் உரிய நகராட்சி அனுமதி இல்லாமல் நடப்பதாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்தன. விற்பனைக்கு கொண்டுவரப்படும் ஆட்டு இறைச்சி தரம் உள்ளது என்றும், புதிதாக வெட்டப்பட்டது என்பதற்கும் நகராட்சி மூலம் ஒப்புதல் பெற்ற பின்னரே விற்பனை செய்ய வேண்டும் என்பது நடைமுறை.

    ஆனால் போடியில் தற்போது புற்றீசல் போல பெருகிவரும் ஆட்டிறைச்சி கடைகள் உரிய அனுமதி இன்றியும் நகராட்சி அனுமதி பெறாமல் இறைச்சி விற்பனையில் ஈடுபட்டு வந்தன.

    மேலும் சாலைகளை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைக்கப்பட்டதால் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது. எனவே நகராட்சியிடம் உரிய அனுமதி பெற்று கடைகள் நடத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியும் யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனையடுத்து ஆக்கிரமிப்பில் இயங்கிய ஆட்டு இறைச்சி கடைகள் நகராட்சி மூலம் அகற்றப்பட்டது. மீண்டும் அதே இடத்தில் கடை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • உத்தமபாளையம் மற்றும் வண்ணாத்திபாறை ஆகிய 2 துணை மின்நிலை யங்களிலும் நாளை (4-ந்தேதி) பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
    • காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சின்னமனூர்:

    சின்னமனூர் கோட்டத்திற்குட்பட்ட உத்தமபாளையம் மற்றும் வண்ணாத்திபாறை ஆகிய 2 துணை மின்நிலை யங்களிலும் நாளை(4-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை உத்தமபாளையம், கோம்பை, அனுமந்தன்பட்டி, பண்ணைப்புரம், ராயப்பன்பட்டி, கோகிலா புரம்,

    ஆனைமலையன்பட்டி, அணைப்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்க முத்தன்பட்டி, சுருளிபட்டி, நாராயண த்தேவன்பட்டி, லோய ர்கேம்ப், மேல்மணலார், கீழ்மணலார், ைஹவேவிஸ், மகாராஜாமெட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்வினி யோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் சந்திர மோகன் தெரிவித்துள்ளார்.

    • பள்ளியின் காம்பவுண்டு சுவர் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்பட்டதால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வர அச்சமடைந்தனர்.
    • பழமையான சுவர் இடித்து அகற்றப்பட்டு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து புதிய சுவர் கட்ட நடவடிக்கை எடுத்ததால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பழமையான இந்த பள்ளியின் காம்பவுண்டு சுவர் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வர அச்சமடைந்தனர்.

    சுமார் 170-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவரும் இங்கு அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு சுவரை இடித்து அகற்றிவிட்டு புதிய சுவர் கட்டவேண்டும் என பெற்றோர்களும் கோரிக்கை விடுத்தனர். பழமையான சுவர் இடிந்துவிழும் நிலையில் இருந்ததால் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவும், தயக்கம் காட்டி வந்தனர்.

    இந்நிலையில் பெற்றோர்கள் கோரிக்கையை ஏற்று காம்பவுண்டு சுவர் இடித்து அகற்றப்பட்டது. இதனைதொடர்ந்து மாவட்ட கவுன்சிலர் பொதுநிதியில் இருந்து விரைவில் புதிய சுவர் கட்டப்படும் என்று பள்ளி நிர்வாகம் அறிவித்தது.

    பழமையான சுவர் இடித்து அகற்றப்பட்டு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து புதிய சுவர் கட்ட நடவடிக்கை எடுத்ததால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • பஸ் வெளித்தோற்றத்தில் புதிய ஆம்னிபஸ் போல காட்சியளித்தாலும் உள்ளே ஏறும் பயணிகளுக்கு அதிர்ச்சியே காத்திருக்கிறது.
    • வெகு தூரம் அமர்ந்து செல்லும் இருக்கைகள் சேதம் அடைந்தும் உள்ளிருக்கும் கம்பிகள் ஆபத்தான நிலையில் உள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் கம்பம் அரசு போக்குவரத்து கழக பனிமனையில் இருந்து தினந்ேதாறும் நூற்றுக்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளியூர் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலான பஸ்கள் ஓட்டை உடைசலான நிலையில் இயக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இருக்கை சேதம்அடைந்தும், கம்பிகள் துரு பிடித்தும் மழை பெய்தால் ஒழுகும் நிலையில் உள்ளது. உள்ளூர் பஸ்கள் என்றால் சில மணி நேரத்தில் பயணிகள் இதனை பொறுத்துக் கொண்டு தங்கள் இடத்திற்கு சென்று விடுவார்கள். ஆனால் ெதாலைதூரங்களுக்கு இயக்கப்படும் பஸ்களும் இதே நிலையில் இருப்பதால் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    கம்பத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு தினந்தோறும் காலை 6.50க்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் வெளித்தோற்றத்தில் புதிய ஆம்னிபஸ் போல காட்சியளித்தாலும் உள்ளே ஏறும் பயணிகளுக்கு அதிர்ச்சியே காத்திருக்கிறது.

    வெகு தூரம் அமர்ந்து செல்லும் இருக்கைகள் சேதம் அடைந்தும் உள்ளிருக்கும் கம்பிகள் ஆபத்தான நிலையில் உள்ளது. தூக்கத்தில் அந்த கம்பியில் இடித்தால் பயணிகளின் தலையை இருக்கை பதம் பார்த்து விடும். இதனால் தூங்காமலேயே பயணம் செய்யும் நிலை உள்ளது. தொலை தூரங்களுக்கு இயக்கப்படும் இடைநில்லா பஸ்களையாவது தரமான முறையில் பராமரித்து இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    • சரியாக படிக்காததால் மாணவனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் வெளியே சென்ற மாணவன் திடீரென மாயமானார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவனை தேடி வருகின்றனர்.

    வருசநாடு:

    ஆண்டிபட்டி அருகே எட்டப்பராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் மகன் சூர்யா (வயது13). இவர் ஜி.உசிலம்பட்டி அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.சரியாக படிக்காததால் பெற்றோர் கண்டித்துள்ளனர்.

    இதனால் சூர்யா திடீரென மாயமானார். அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடை க்காததால் கண்டமனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை தேடி வருகின்றனர்.

    • பராமரிப்பு இல்லாத காரணத்தால் தரைப்பாலத்தில் இருந்து நீர் வெளியேற அமைக்கப்பட்டிருந்த 2 வாய்க்கால்களும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மணல்மேடாக மாறியது.
    • பாலத்தை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருவதோடு இரவு நேரங்களில் பைக் விபத்துகளும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் மயிலாடும்பாறை - பொன்னன்படுகை இடையே சாலையின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு இல்லாத காரணத்தால் தரைப்பாலத்தில் இருந்து நீர் வெளியேற அமைக்கப்பட்டிருந்த 2 வாய்க்கால்களும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மணல்மேடாக மாறியது.

    இதனால் மழை பெய்யும் நேரங்களில் நீர் வெளியேற முடியாமல் தரைப்பாலம் முழுவதும் மழை நீர் தேங்கி காணப்படும். அதுபோன்ற நேரங்களில் தரைப்பாலத்தை கடந்து செல்ல பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். தரைப்பாலத்தில் நீர் உடனடியாக வெளியேறும் வகையில் வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் தற்போது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பொன்னன்படுகை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக தற்போது தரைப்பாலத்தில் மழைநீர் குளம் போல தேங்கி காணப்படுகிறது. எனவே பாலத்தை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருவதோடு இரவு நேரங்களில் பைக் விபத்துகளும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மேலும் சில வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு அதிக தொலைவு உடைய குமணன்தொழு சாலையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

    இதனால் வாகன ஓட்டிகளுக்கு வீண் அலைச்சல் ஏற்படுகிறது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும். அல்லது அதே இடத்தில் புதிய மேம்பாலம் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரூ.4.67 லட்சம் ஊராட்சி நிதியை முறைகேடு செய்த தாகவும், அந்த நிதியை திரும்ப செலுத்த வேண்டும் என உள்ளாட்சிகள் தினத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
    • கிராம சபை கூட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் போதை ஊசி பயன்பாடு குறித்தும் நடவடிக்கை எடுக்க வலியுறத்தப்பட்டது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றியம் சுருளிபட்டியில் ஊராட்சி மன்ற அலுவலக கூட்டர ங்கில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் நாகமணிவெங்கடேசன் தலைமை வகித்தார்.

    துணைத்தலைவர் ஜெயந்திமாயாண்டி முன்னி லை வகித்தார். எழுத்தர் பிச்சைமணி தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் பங்கேற்ற முத்துபாண்டி என்பவர் பேசும்போது, ரூ.4.67 லட்சம் ஊராட்சி நிதியை முறைகேடு செய்த தாகவும், அந்த நிதியை திரும்ப செலுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் வலியுறுத்தி உள்ளார்.

    இந்த நிதியை யார் செலுத்துவது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ஊராட்சி மன்ற தலைவர் நாகமணி வெங்கடேசன் நானே அந்த பணத்தை திருப்பி செலுத்தி விடுகிறேன் என்றார். இதனையடுத்து கூட்டம் தொடர்ந்து நடைபெற்று தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.

    தேனி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் போதை ஊசி பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சின்னமனூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் போதை ஊசி பயன்படுத்துவோர் அதிகரித்துள்ளனர். இதுதொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீ சார் அதிரடி சோதனை நடத்தி சுமார் 6 பேரை கைது செய்தனர்.

    ஆனால் அதன்பிறகு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்ைல. பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை ஊசி விற்பனை செய்யும் கும்பல் மதுரை, திருச்சி மாவட்ட ங்களில் இருந்து புரோக்க ர்கள் மூலம் இதனை சப்ளை செய்து வருகின்றனர். எனவே நேற்று நடந்த கிராம சபை கூட்டத்திலும் பல்வேறு ஊராட்சிகளில் போதை ஊசி பயன்பாடு குறித்து மக்கள் கவலை தெரிவித்தனர்.

    கிராமப்புறங்களில் போதை ஊசி பயன்படுத்து வோர் மற்றும் அதனை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கடும் நட வடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • மழைநீரில் அடித்து வரப்பட்ட மரக்கிளைகள் மற்றும் மரங்கள் குப்பைகள் அனைத்தும் நீர்வீழ்ச்சி மதகு தடுப்பணைப் பகுதிகளில் குவிந்து உள்ளது.
    • மரக்கி ளைகளை அப்புறப்படுத்தி அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சி நீர்வரத்து பகுதியை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கண்மாய்க ளின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருவது அணை பிள்ளையார் நீர்வீழ்ச்சி. மேலும் போடியில் இருந்து வெளியேறும் மழை உபரி நீர் கொட்டக்குடி ஆற்றின் வழியே வைகை ஆற்றுக்கு செல்கிறது.

    நூற்றாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த நீர் வீழ்ச்சி பொதுப்பணித்து றை மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளின் சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இதனால் இது போடியில் திற்பரப்பு என்று அழைக்க ப்பட்டு வருகிறது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளான குரங்கணி, கொட்டகுடி, போடி மெட்டு, பிச்சாங்கரைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் அடித்து வரப்பட்ட மரக்கிளைகள் மற்றும் மரங்கள் குப்பைகள் அனைத்தும் நீர்வீழ்ச்சி மதகு தடுப்பணைப் பகுதிகளில் குவிந்து உள்ளது.

    பொதுப்பணித்துறையின் அலட்சியப் போக்கால் குப்பைகள், மரக்கிளைகள் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது. அணைக்கட்டுப் பகுதிகளில் குவிந்து கிடப்பதால் நீர்வரத்து பகுதியில் உள்ள சிமெண்ட் தளங்கள் சேதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக பொதுப்பணித்துறை இப்பகுதியில் உள்ள மரக்கி ளைகளை அப்புறப்படுத்தி அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சி நீர்வரத்து பகு தியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    • மது போதைக்கு அடிமையாகி ஊர்சுற்றிய தொழிலாளி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் திடீரென மாயமானார்.
    • மாயமான தொழிலாளி கல்குவாரியில் மர்மமான முறையில் இறந்துகிடந்த நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி மேட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் காட்டுராஜா(45). இவர் வேலைக்கு செல்லாமல் மது போதைக்கு அடிமையாகி ஊர்சுற்றி திரிந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் திடீரென மாயமானார். இதனைதொடர்ந்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காட்டு ராஜாவை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கல்குவாரி பள்ளத்தில் காட்டுராஜா பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தேவதானப்பட்டி போலீசார் காட்டுராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

    • யூனியன் அலுவலக காவலாளி குடிபோதையில் தவறிவிழுந்து இறந்தார்.
    • மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே கீழமஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகன்(30). இவருக்கு திருமணமாக வில்லை. ஆண்டிபட்டி யூனியன் அலுவலகத்தில் தற்காலிக காவலாளியாக பணிபுரிந்து வந்தார். சம்ப வத்தன்று இரவு பணிக்கு முருகன் வந்துள்ளார்.

    அங்கு சேர்மன் அலுவல கம் முன்பு குடிபோதையில் தவறிவிழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மறுநாள் காலை அலுவலக ஊழியர்கள் வந்து பார்த்த போது முருகன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து ஆண்டிபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • பா.ஜ.க. சார்பாக மாநிலம் முழுவதும் 10000-க்கும் மேற்பட்ட கொடிக்கம்பங்கள் நடப்படும் என அறிவிக்கப்பட்டது.
    • போலீசார் தடுத்ததால் ஆத்திரமடைந்த பா.ஜ.வினர் தேனி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    பெரியகுளம்:

    பா.ஜ.க.மாநில தலைவர் அண்ணாமலையின் சென்னை வீட்டின் முன்பு நடப்பட்ட கட்சியின் கொடி க்கம்பம் அகற்றப்பட்டது. இந்த சம்பவத்தை தொட ர்ந்து மாநிலம் முழுவதும் 10000-க்கும் மேற்பட்ட கொடிக்கம்பங்கள் நடப்ப டும் என தெரிவித்திருந்தார்.

    அதன்படி பெரியகுளம் அருகே ஏ.புதுப்பட்டி பகுதியில் பா.ஜ.க. கொடிக்கம்பம் நடுவதற்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளரும், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்த லைவருமான ராஜ பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர். கொடிக்கம்பம் நட அனுமதி இல்லாததால் அவர்களை போலீசார் கலைந்து போகுமாறு கூறினர்.

    அதற்கு எதிர்ப்பு தெரி வித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ராஜ பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.வினர் தேனி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதனைதொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க. வினரை போலீசார் கைது செய்து அழைத்துச்சென்ற தால் பரபரப்பு ஏற்பட்டது.

    ×