search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி லாரி டிரைவர் கொலையில் திடீர் திருப்பம்- கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொன்றது அம்பலம்
    X

    தூத்துக்குடி லாரி டிரைவர் கொலையில் திடீர் திருப்பம்- கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொன்றது அம்பலம்

    • கருப்பசாமி உயிருடன் இருந்தால் தனிமையில் சந்திக்க முடியாது என கருதிய கள்ளக்காதலர்கள் கருப்பசாமியை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளனர்.
    • சம்பவத்தன்று கருப்பசாமி திண்ணையில் படுத்து தூங்கிய போது கனகலெட்சுமி, ரவிச்சந்திரன் ஆகியோர் சேர்ந்து வெட்டிக் கொன்றது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள பேரூரணி வடக்கு தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 36), லாரி டிரைவர். இவரது மனைவி கனகலெட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    கடந்த 7-ந் தேதி இரவு கருப்பசாமி வீட்டின் முன்பகுதியில் உள்ள திண்ணையில் படுத்து தூங்கிக் கொண்டு இருந்தார். மறுநாள் அதிகாலை கருப்பசாமி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இது தொடர்பாக புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் ரமேஷ், தட்டப்பாறை சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    போலீசார் விசாரணையில் கருப்பசாமியின் மனைவி கனகலெட்சுமி முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது.

    கனகலெட்சுமியின் பெரியம்மா மகளின் கணவர் ரவிச்சந்திரன். அக்காள் கணவர் என்ற முறையில் அடிக்கடி ரவிச்சந்திரன், கருப்பசாமி வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். அப்போது அவருக்கும், கனகலெட்சுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து பேசிவந்துள்ளனர். இது கருப்பசாமிக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர் இருவரையும் கண்டித்துள்ளார்.

    மேலும் கருப்பசாமியும், கனகலெட்சுமியும் கருத்துவேறுபாடு காரணமாக இதற்கு முன்னர் பிரிந்து இருந்த போது ஏற்பட்ட தகராறில் கருப்பசாமி, ரவிச்சந்திரனை அடித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    கருப்பசாமி உயிருடன் இருந்தால் தனிமையில் சந்திக்க முடியாது என கருதிய கள்ளக்காதலர்கள் கருப்பசாமியை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளனர். சம்பவத்தன்று கருப்பசாமி திண்ணையில் படுத்து தூங்கிய போது கனகலெட்சுமி, ரவிச்சந்திரன் ஆகியோர் சேர்ந்து வெட்டிக் கொன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். போலீசாரிடம் அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கள்ளக்காதலை கண்டித்ததால் கருப்ப சாமியை கொன்றதாக தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×