search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்ணமங்கலம், போளூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
    X

    கண்ணமங்கலம், போளூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

    • பராமரிப்பு பணிகள் நடக்கிறது
    • அதிகாரி தகவல்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே சந்தவாசல் கேவி துணை மின் நிலையத்தில் நாளை அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதன் காரணமாக நாளை காலை 9மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஒண்ணுப்புரம் பிரிவு ஒண்ணுபுரம், அத்திமலைப்பட்டு, அம்மாபாளையம், அழகு சேனை, வண்ணாங்குளம், 5 புத்தூர், பெரிய அய்யம்பாளையம், சின்ன அய்யம்பாளையம், மேல்நகர், கீழ்நகர், பட்டாங்குளம், புதுப்பாளையம், குஞ்சாந்தாங்கல் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இந்த தகவலை ஆரணி மின் வாரிய செயற்பொறியாளர் நடராஜன் தெரிவித்துள்ளார். இதேபோல போளூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதனால் நாளை வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை போளூர் டவுன், அத்திமூர் பெலாசூர், மண்ட கொளத்தூர் ஜடாதாரிகுப்பம், கலசப்பாக்கம், வாட்டர் ஒர்க்ஸ், குண்ணத்தூர், கொம்மனந்தல், முருகாபாடி உள்ளிட்ட பகுதிகளை மின்சாரம் நிறுத்தப்படும் மேற்கண்ட தகவலை போளூர் செயற்பொறியாளர் குமரன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×