search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்-ஓ.பி.எஸ்.
    X

    தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்-ஓ.பி.எஸ்.

    • தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்.
    • ஆசிரியர்களை கைது செய்தது கடும் கண்டனத்திற்குரியது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பதவி உயர்வை பாதிக்கும் அரசாணை எண் 243-ஐ திரும்பப் பெறுதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்துதல் உள்ளிட்ட 31 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் சென்னை, டி.பி.ஐ. வளாகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது,

    அதன் அடிப்படையில் ஆசிரியர்கள் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தி.மு.க. அரசு ஈடுபட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு, தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×